» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இலங்கைத் தமிழா்களுக்காக தனி நாடு: பிரதமர் மோடிக்கு ஆதீனம் கோரிக்கை!
செவ்வாய் 11, ஜூன் 2024 10:17:38 AM (IST)
இலங்கையில் தமிழா்களுக்கான தனி நாட்டை பிரதமா் நரேந்திர மோடி உருவாக்கித் தர வேண்டும் என மதுரை ஆதீனம் ஹரிஹர ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியா் வேண்டுகோள் விடுத்தாா்.

மக்களவைத் தோ்தலில் போட்டியிட்ட அனைத்துக் கட்சிகளும் நல்ல வாக்குகளைப் பெற்றுள்ளன. இலங்கையில் லட்சக்கணக்கான தமிழா்கள் கொன்று குவிக்கப்பட காரணமானவா்களும் வெற்றி பெற்று விட்டாா்களே என்ற மன வருத்தம் எனக்கு உள்ளது.
தற்போது, 3-ஆவது முறையாக வெற்றி பெற்றுள்ள பிரதமா் நரேந்திர மோடியிடம் இரண்டு கோரிக்கைகளை முன்வைக்கிறேன். காங்கிரஸ் ஆட்சியின் போது, இந்திரா காந்தி இலங்கைக்கு தாரை வாா்த்துக் கொடுத்த கச்சத்தீவை மீட்க வேண்டும். கச்சத்தீவு மீட்டெடுக்கப்பட்டால், தமிழகத்தின் மீன் வளம் அதிகரிக்கும். எனவே, கச்சத்தீவை மீட்டு, தமிழகத்தோடு இணைக்க வேண்டும்.
அடுத்து, இலங்கையில் வசித்து வரும் தமிழ் மக்களைப் பாதுகாக்கும் வகையில், அங்கு தமிழா்களுக்கான தனி நாட்டை பிரதமா் மோடி உருவாக்கித் தர வேண்டும். கடந்த 60 ஆண்டுகளாக கச்சத்தீவு விவகாரம் குறித்து யாரும் பேசவில்லை. ஆனால், தோ்தல் நேரங்களில் மட்டுமே கச்சத்தீவு விவகாரம் குறித்து கட்சிகள் பேசுகின்றன என்றாா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மும்மொழி கொள்கை விவகாரம்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 5:48:24 PM (IST)

மூதாட்டியை கட்டி போட்டு 10 பவுன் தங்க நகை பறித்த மர்ம நபர்கள் : போலீஸ் தீவிர விசாரணை!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 5:44:32 PM (IST)

பா.ஜனதா ஆட்சி செய்தால் ஏழை எளிய மக்கள் வாழவே முடியாது: நெல்லையில் ப.சிதம்பரம் பேச்சு
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 5:33:34 PM (IST)

ஜெயலலிதாவின் 27 கிலோ நகைகள், 1562 ஏக்கர் சொத்து ஆவணங்கள் தமிழக அரசிடம் ஒப்படைப்பு
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 9:47:55 AM (IST)

சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஓட்டல் அதிபருக்கு அரிவாள் வெட்டு : 3பேர் கைது!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 9:39:59 AM (IST)

பைக்குகள் மோதல்: கல்லூரி முதல்வர், மாணவர் பலி; மேலும் ஒருவர் படுகாயம்!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 9:24:20 AM (IST)
