» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சேதுக்குவாய்த்தான் வளர்ச்சித்திட்ட பணிகளை ஆட்சியர் ஆய்வு
சனி 18, மே 2024 10:34:21 AM (IST)

சேதுக்குவாய்த்தான் ஊராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் சேதுக்குவாய்த்தான் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.12.70 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுவரும் நியாய விலைக் கடை கட்டுமானப் பணிகளை, ரூ.4 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் தகன மேடை கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி இன்று (18.05.2024) ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கட்டுமானப் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா.ஐஸ்வர்யா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உலகநாதன், உதவி செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (ஆழ்வார்திருநகரி) பாக்கியம் லீலா, சித்தார்த்தன் ஆகியோர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கல்லூரியில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் கைது!
புதன் 19, மார்ச் 2025 5:26:54 PM (IST)

நெல்லை ஜாஹிர் உசேன் கொலை வழக்கு: குற்றவாளியை சுட்டு பிடித்த போலீசார்!
புதன் 19, மார்ச் 2025 5:01:36 PM (IST)

நெல்லையில் முன்னாள் எஸ்.ஐ., ஜாஹிர் உசேன் கொலை : காவல்துறை அதிகாரிகள் 2பேர் சஸ்பெண்ட்
புதன் 19, மார்ச் 2025 4:57:26 PM (IST)

நெல்லை ஜாஹிர் உசேன் கொலையில் யாரும் தப்ப முடியாது : முதல்வர் ஸ்டாலின் உறுதி!
புதன் 19, மார்ச் 2025 4:34:05 PM (IST)

தவெகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம்? - தமிழக வெற்றிக்கழகம் விளக்கம்
புதன் 19, மார்ச் 2025 10:29:04 AM (IST)

கட்டுமான பணியின்போது மின்சாரம் தாக்கி ஆக்கி வீரர் உள்பட 2 பேர் பலி: நெல்லையில் பரிதாபம்
புதன் 19, மார்ச் 2025 8:35:58 AM (IST)
