» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
காங்கிரஸ் கட்சியினர் 75 பேர் திமுகவில் ஐக்கியம் : கீதாஜீவன் முன்னிலையில் இணைந்தனர்!
செவ்வாய் 2, ஜூன் 2026 10:19:01 AM (IST)

தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 75 பேர், அக்கட்சியில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின் காரணமாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு தரப்பினர், அக்கட்சி தமிழக வெற்றிக் கழகத்தோடு கூட்டணி அமைத்ததை விரும்பாமல் மாற்றுக்கட்சிகளில் இணைந்து வருவதாக கூறப்படுகிறது. தூத்துக்குடியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ராஜன் மற்றும் முரளிதரன் ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.
இந்நிலையில், எட்டையாபுரம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அரங்கில் நடைபெற்ற கழ்ச்சியில், 40-வது வார்டு காங்கிரஸ் தலைவர் ஜோ பர்னாந்து, மிக்கேல் ரெஜினா, ஈஸ்வரி, வழக்கறிஞர் பட்டுராஜா, சுரேஷ், சக்திவேல், ராஜ்குமார், முருகேசன், பிரேமா, கலா, மல்லிகா உட்பட 75 பேர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
திமுகவில் இணைந்த அனைவரையும் வரவேற்றுப் பொன்னாடை போர்த்திய கீதாஜீவன், அவர்களுக்கு திமுக வேட்டி மற்றும் சேலைகளை வழங்கி வாழ்த்தினார். பின்னர் அவர் பேசுகையில், "திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையையேற்று இணைந்துள்ள உங்களை, வடக்கு மாவட்ட திமுக மகிழ்ச்சியோடு வரவேற்கிறது. வரும் காலங்களில் உங்களது பகுதிகளில் திமுகவின் வெற்றிக்கு உங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு பணியாற்ற வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண்டேயன், கருணாநிதி, திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அணித் தலைவர்கள் அருண்குமார், பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர்கள் அந்தோணி கண்ணன், நாகராஜன், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி, ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்டப் பிரதிநிதி பாஸ்கர் மற்றும் சாந்தி மேரி, கமலாதேவி, மணி, ஆல்பர்ட் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரயில்கள் சேவையில் மாற்றம் வருமா? பயணிகள் எதிர்பார்ப்பு
சனி 6, ஜூன் 2026 5:52:23 PM (IST)

பிளஸ் 2 மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டு மையம் தொடக்கம்: ஆட்சியர் மு.பிரதாப் தகவல்!
சனி 6, ஜூன் 2026 12:30:28 PM (IST)

மாணவர்கள் சுற்றுச்சூழல் தூதுவர்களாகச் செயல்பட வேண்டும்: ஆட்சியர் மு.பிரதாப் அறிவுறுத்தல்!
வெள்ளி 5, ஜூன் 2026 5:51:36 PM (IST)

ஆசிய டேக்வாண்டோ போட்டியில் தங்கம் வென்று குமரி மாவட்ட மாற்றுத்திறனாளி வீரர் சாதனை!
வியாழன் 4, ஜூன் 2026 12:44:31 PM (IST)

கன்னியாகுமரியில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு: ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிரடி உத்தரவு!
புதன் 3, ஜூன் 2026 4:48:05 PM (IST)

காப்புக்காட்டில் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு 'இலக்கியச் செம்மல்' விருது!
புதன் 3, ஜூன் 2026 3:46:39 PM (IST)



அதுJun 2, 2026 - 11:17:16 AM | Posted IP 172.7*****