» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
போதிய மழையின்றி பயிர்கள் கருகியதால் சோகம்: வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை!
வியாழன் 19, பிப்ரவரி 2026 11:19:10 AM (IST)

கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் போதிய மழையின்றி பயிர்கள் கருகியதால், இப்பகுதியை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தனித்தனி மனுக்களுடன் வந்து மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் சந்தித்தனர்.
அவர்கள் அளித்த மனுவில், "கோவில்பட்டி வட்டத்தில் பருவமழை பொய்த்ததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, இப்பகுதியை வறட்சி நிறைந்த பகுதியாக அரசு அறிவிக்க வேண்டும். பயிரிடப்பட்ட பயிர்கள் அனைத்தும் போதிய நீரின்றி கருகிவிட்டதால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய வறட்சி நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.
சேதமடைந்த பயிர்களுக்குக் காப்பீட்டுத் தொகையை விரைந்து பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள எங்களது கிராமங்களில் இந்த ஆண்டு மழையளவு மிகக்குறைவாக உள்ளது. பெரும் செலவு செய்து பயிரிட்ட பயிர்கள் கண்முன்னேயே கருகி வருவது வேதனையளிக்கிறது. அரசு உடனடியாக தலையிட்டு எங்களைக் காக்க வேண்டும்," என விவசாயிகள் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரதமர் மோடி வருகை: கன்னியாகுமரிக்கு தினசரி இரயில்கள் கிடைக்குமா? – பயணிகள் எதிர்பார்ப்பு!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 8:10:46 PM (IST)

அமிர்த் பாரத் கால அட்டவணையை மாற்றக் கோரிக்கை: நள்ளிரவில் சேருவதால் ரயில் பயணிகள் அவதி
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:02:34 PM (IST)

சீசன் காலத்தில் ஏமாற்றிய கேரை மீன்கள்: சூறைக் காற்றால் பாதியிலேயே கரை திரும்பிய மீனவர்கள்!
வியாழன் 19, பிப்ரவரி 2026 5:10:51 PM (IST)

விபத்தில் மூளைச்சாவு அடைந்த புதுமாப்பிள்ளை: உடல் உறுப்புகள் தானம் மூலம் 6 பேருக்கு மறுவாழ்வு
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:41:44 AM (IST)

துபாயில் வேலை என ஆசை காட்டி ரூ.1.5 கோடி மோசடி செய்தவர் 24 மணி நேரத்தில் கைது!
புதன் 18, பிப்ரவரி 2026 4:55:56 PM (IST)

மருத்துவ மேல்படிப்புக்கு சீட் வாங்கித் தருவதாக ரூ.18 லட்சம் மோசடி: தம்பதி உட்பட 3 பேர் மீது வழக்கு!
புதன் 18, பிப்ரவரி 2026 8:41:13 AM (IST)


நல்லதுFeb 19, 2026 - 01:52:40 PM | Posted IP 162.1*****