» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடி பெண்கள் கல்லூரியில் 593 பேருக்கு மடிக்கணினி : அமைச்சர் பி. கீதா ஜீவன் வழங்கினார்

வியாழன் 8, ஜனவரி 2026 7:48:07 AM (IST)



தூத்துக்குடி புனித மரியன்னை பெண்கள் கல்லூரியில் 593 மாணவியருக்கு தமிழக அரசின் இலவச மடிக்கணினிகளை அமைச்சர் பி. கீதா ஜீவன் வழங்கினார்.

தூத்துக்குடி புனித மரியன்னை பெண்கள் கல்லூரியில் 593 மாணவியருக்கு தமிழக அரசின் இலவச மடிக்கணினிகளை மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் தலைமையில் அமைச்சர் பி. கீதா ஜீவன் வழங்கி பேசும்போது, தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 11.19 சதவீதம் என மத்திய அரசின் புள்ளிவிவரம் கூறுகிறது. 

அதேபோல, உழைக்கும் மகளிர் அதிகமுள்ள மாநிலம் தமிழ்நாடு. வறுமைக்கோட்டின்கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கை குறைவான மாநிலம் தமிழ்நாடு. மாணவர், மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்குவது, வேலைவாய்ப்புக்கு மிகவும் உதவும் என்றார். 

விழாவில் திட்ட அலுவலர் நாகராஜன், கல்லூரிச் செயலர் குழந்தை தெரசா, கல்லூரி முதல்வர் ஜெஸி பர்ணான்டோ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து

அதான்Jan 8, 2026 - 08:08:28 AM | Posted IP 104.2*****

தேர்தல் வரும் நேரம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory