» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடியில் டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தம்: தலைமை அலுவலகத்தில் முற்றுகை!
செவ்வாய் 2, டிசம்பர் 2025 12:40:58 PM (IST)

தூத்துக்குடியில் காலி பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் டாஸ்மாக் மதுபான கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் திட்டம் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காலி பாட்டில்களை திரும்பி ஒப்படைக்கும் திட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்களை பயன்படுத்தக் கூடாது மாற்றாக பார் நடத்தும் ஒப்பந்ததாரர்களை பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள 123 டாஸ்மாக் கடைகளை அடைத்து விற்பனையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் சிப்காட் வளாகத்தில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடம் மதுரை மண்டல மேலாளர் இளவரசன், மாவட்ட மேலாளர் அய்யப்பன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் சட்டமன்ற பொது தேர்தல் பணிகள் : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு
வியாழன் 11, டிசம்பர் 2025 4:49:45 PM (IST)

சென்னை - சாய் நகர் சீரடி வாராந்திர ரயிலை குமரி வரை நீட்டிக்கப்படுமா? பயணிகள் கோரிக்கை!
வியாழன் 11, டிசம்பர் 2025 3:26:54 PM (IST)

குடிபோதையில் மினி பஸ் ஓட்டிய ஓட்டுநருக்கு ரூ. 27,500 அபராதம்: போலீசார் அதிரடி!
வியாழன் 11, டிசம்பர் 2025 12:36:44 PM (IST)

கணக்கீட்டுப் படிவங்களை வாக்காளர்கள் விரைந்து கொடுக்க வேண்டும் : ஆட்சியர் வேண்டுகோள்!
புதன் 10, டிசம்பர் 2025 5:44:30 PM (IST)

குமரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டும் ஏஐ இயந்திரம்: எஸ்பி துவக்கி வைத்தார்!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 10:59:24 AM (IST)

கலிங்கராஜபுரத்தில் புதிய விளையாட்டு அரங்கம் பணிகள் : முதல்வர் துவக்கி வைத்தார்!
திங்கள் 8, டிசம்பர் 2025 5:34:07 PM (IST)


.gif)
டேய்Dec 2, 2025 - 12:58:57 PM | Posted IP 172.7*****