» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நிதி நிறுவனத்தில் போலி ரசீது வழங்கி ரூ.46 லட்சம் கையாடல்: பெண் மேலாளர் சிக்கினார்
திங்கள் 1, டிசம்பர் 2025 8:46:21 PM (IST)
தேங்காப்பட்டணத்தில் தனியார் நிதி நிறுவனத்தில் போலி ரசீது வழங்கி ரூ.46 லட்சம் மோசடி செய்த பெண் மேலாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குமரி மாவட்டம் தேங்காப்பட்டணத்தில் ஒரு தனியார் நிதி நிறுவனம் உள்ளது. இதில் காஞ்சிரவிளையை சேர்ந்த பிந்து (வயது 46) என்பவர் கிளை மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிதி நிறுவனத்தில் சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் நகைகளை அடகு வைத்து கடன் பெற்று வருகிறார்கள்.
இந்தநிலையில் மண்டல மேலாளரான அருமனையை சேர்ந்த ஜெகன் டார்வின் (35) என்பவர் அந்த நிதி நிறுவனத்தில் ஆய்வு செய்தார். அப்போது கிளை மேலாளர் பிந்து, நகையை அடகு வைத்த வாடிக்கையாளர்களுக்கு போலி ரசீது வழங்கி ரூ.46 லட்சத்து 8 ஆயிரத்து 938-ஐ கையாடல் செய்திருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து மண்டல மேலாளர் ஜெகன் டார்வின் புதுக்கடை போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் பிந்து மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் நிதிநிறுவனத்தில் போலி ரசீது வழங்கி ரூ.46 லட்சம் கையாடல் செய்யப்பட்ட சம்பவம் வாடிக்கையாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் சட்டமன்ற பொது தேர்தல் பணிகள் : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு
வியாழன் 11, டிசம்பர் 2025 4:49:45 PM (IST)

சென்னை - சாய் நகர் சீரடி வாராந்திர ரயிலை குமரி வரை நீட்டிக்கப்படுமா? பயணிகள் கோரிக்கை!
வியாழன் 11, டிசம்பர் 2025 3:26:54 PM (IST)

குடிபோதையில் மினி பஸ் ஓட்டிய ஓட்டுநருக்கு ரூ. 27,500 அபராதம்: போலீசார் அதிரடி!
வியாழன் 11, டிசம்பர் 2025 12:36:44 PM (IST)

கணக்கீட்டுப் படிவங்களை வாக்காளர்கள் விரைந்து கொடுக்க வேண்டும் : ஆட்சியர் வேண்டுகோள்!
புதன் 10, டிசம்பர் 2025 5:44:30 PM (IST)

குமரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டும் ஏஐ இயந்திரம்: எஸ்பி துவக்கி வைத்தார்!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 10:59:24 AM (IST)

கலிங்கராஜபுரத்தில் புதிய விளையாட்டு அரங்கம் பணிகள் : முதல்வர் துவக்கி வைத்தார்!
திங்கள் 8, டிசம்பர் 2025 5:34:07 PM (IST)


.gif)