» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடியில் சூரசம்ஹார நிகழ்ச்சியை முன்னிட்டு சாலைகளை சீரமைத்த பாஜகவினர்!

வியாழன் 2, அக்டோபர் 2025 10:51:08 AM (IST)



தூத்துக்குடியில் சூரசம்ஹார நிகழ்ச்சியை முன்னிட்டு பாஜகவினர் சாலைகளை  சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடியில் உள்ள கோவில்களில் நவராத்திரியின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா இன்று நடைபெற உள்ளது. தூத்துக்குடி மாநகரின் பல இடங்களில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழிகள் மூடாமலே உள்ளன. இதனால் சூரசம்ஹார நிகழ்ச்சிகளில் சப்பரங்கள் கொண்டு வருவதில் சிரமம் ஏற்படும்.

இதனை முன்னிட்டு தூத்துக்குடியில் பாஜகவினர் பல இடங்களில் சாலையை சீரமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தாமோதர் நகர் பகுதியில் குண்டும் குழியுமான சாலையை பாஜகவினர் லாரியில் சரல் மண் கொண்டு சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியில் மாநில ஓபிசி அணி பொறுப்பாளர் சுவைதர், வழக்கறிஞர் பிரிவு பொறுப்பாளர் நாகராஜன், பாஜக பொறுப்பாளர்கள் சொக்கலிங்கம், சிவா, பழக்கடை ராஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

JAIHINDOct 2, 2025 - 01:13:10 PM | Posted IP 172.7*****

VERY GOOD SERVICE BY BJP

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory