» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
செந்தூர் எக்ஸ்பிரசில் 24 பெட்டிகள் இணைக்கப்படும் : ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங்
ஞாயிறு 27, ஜூலை 2025 11:10:06 AM (IST)

திருச்செந்தூர் - சென்னை அதிவிரைவு ரயிலில் 24 பெட்டிகள் இணைக்கப்படும் என்று தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார்.
திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ. 17.5 கோடியில் காத்திருக்கும் அறை, மாற்றுத்திறனாளி பயணிகள் காத்திருக்கும்- தங்கும் அறைகள், மின்தூக்கி, இருசக்கர, நான்கு சக்கர வாகன நிறுத்தம், நவீன சுகாரதார வளாகம், வாட்டர் கூலர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன்.
இப்ப பணிகளை நேற்று ஆய்வு செய்த ஆர்.என்.சிங், திட்டப் பணிகள் குறத்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டப் பணிகளை ஆய்வு செய்தோம். அப்பணிகள் 60 சதவீதத்திற்கு மேலாக நிறைவு பெற்றுள்ளன. அதில் குளிர்சாதன காத்திருப்போர் அறைகளில் சில மாற்றங்கள் செய்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திட்டப் பணிகள் அக்டோபர் 15ஆம் தேதிக்குள் நிறைவுற்று பயன்பாட்டுக்கு வரும். திருச்செந்தூர்- திருநெல்வேலி வரையிலான நிலையங்களில் நடைபெற்று வரும் நடைபாதை விரிவாக்க பணிகள் நிறைவுற்றதும் செந்தூர் அதிவிரைவு ரயிலில் (திருச்செந்தூர்- சென்னை) 24 பெட்டிகள் இணைக்கப்படும். திருச்செந்தூர்- பாலக்காடு விரைவு ரயிலிலும் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும்.
வந்தே பாரத் ரயிலை திருச்செந்தூர் வரை இயக்குவதற்கான திட்டமோ, திருச்செந்தூர்- தூத்துக்குடிக்கு புதிய ரயில் வழித்தடம் அமைப்பதற்கான திட்டமோ தற்போது இல்லை. அதேவேளையில், திருச்செந்தூர்-சென்னைக்கு நேரடி ரயில் இயக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார். ஆய்வின்போது, மதுரை கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீ வத்ஸவா, கோட்ட மூத்த வணிக மேலாளர் கணேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசுப் பேருந்தில் 6 பவுன் தங்கச் சங்கிலி திருட்டு: பெண்கள் இருவர் அதிரடி கைது!
திங்கள் 20, ஜூலை 2026 12:25:31 PM (IST)

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சி: பட்டதாரிகள் விண்ணப்பிக்க அழைப்பு!
வெள்ளி 17, ஜூலை 2026 4:42:15 PM (IST)

நாகர்கோவில் - கோவை அதிவிரைவு ரயிலில் கூடுதலாக ஒரு படுக்கை வசதிப் பெட்டி தற்காலிக இணைப்பு!
வெள்ளி 17, ஜூலை 2026 4:25:32 PM (IST)

நாகர்கோவில் கிளைச் சிறையில் கைதிகளின் பாதுகாப்பு கேள்விக்குறி: சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!
வெள்ளி 17, ஜூலை 2026 3:43:19 PM (IST)

இந்து முன்னணி நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு: மாநிலத் துணைத் தலைவர் கண்டனம்!
வெள்ளி 17, ஜூலை 2026 11:01:05 AM (IST)

சென்னை - கன்னியாகுமரி புல்லட் ரயில் திட்டம்: நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தல்!
வியாழன் 16, ஜூலை 2026 4:59:47 PM (IST)



JohnJul 28, 2025 - 08:53:18 PM | Posted IP 104.2*****