» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தூத்துக்குடி பன்னாட்டு விமான நிலையம் அமைந்த வரலாறு: மூத்த வக்கீல் சொக்கலிங்கம் பேட்டி..!

வெள்ளி 25, ஜூலை 2025 9:05:42 PM (IST)



தூத்துக்குடி பன்னாட்டு விமான நிலையம் அமைந்த வரலாறு குறித்து மூத்த வக்கீல் சொக்கலிங்கம் கூறுகையில், "பிரதமர் மொரார்ஜி தேசாய் தலைமையில் ஜனதா கட்சி ஆட்சியில் இருந்த காலம் அது. அன்றைய விமான போக்குவரத்து துறை அமைச்சரான புருஷோத்தம் கவுஷிக் தூத்துக்குடி வந்திருந்த போது, இந்திய வியாபார தொழில் வர்த்தக சங்க கூட்ட அரங்கில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

அப்போது, வியாபார சங்க தலைவரான வி.வி.டி.நித்தியானந்தம் விமான நிலையம் வாகைகுளத்தில் அமைக்க வேண்டும் என்று கூறினார். பின்னர் பேசிய நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ஆலடி அருணா விமான நிலையம் அபிஷேகப்பட்டியில் அமைக்க வேண்டும் என்றும், கே.டி.கோசல்ராம் கயத்தாறில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்றும் பேசினார்கள். அடுத்து பேசிய அப்போதைய ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட ஜனதா கட்சி தலைவரான வக்கீல் எம்.சொக்கலிங்கம் வாகைகுளத்தில்தான் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அப்போதைய தூத்துக்குடி துறைமுக சபை தலைவரான, முன்னாள் நெல்லை மாவட்ட ஆட்சியர் வி.சுந்தரம், 1923-ஆம் ஆண்டிலேயே அன்னியர் ஆட்சி காலத்தில் வாகைகுளத்தில் விமான நிலையம் அமைப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்றும், அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து வாகைகுளத்தில் விமான நிலையம் அமைப்பதுதான் சரி என்றும் ஆதாரங்களுடன் தெளிவுபடுத்தி பேசினார்.

இறுதியாக பேசிய அமைச்சர் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் புருஷோத்தம கவுஷிக் வாகைகுளத்தில் விமானம் நிலையம் அமைக்கப்படும் என்று அறிவித்தார் அவரது அறிவிப்பை வரவேற்று கூட்டத்தினர் கரவொலி எழுப்பினார்கள்., அதை தொடர்ந்து விமான நிலையத்திற்கான அடிக்கல் வாகைகுளத்தில் நாட்டப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டு, பயணிகள் விமான போக்குவரத்து தொடங்கி, படிப்படியாக விரிவு படுத்தப்பட்டு, தற்போது பன்னாட்டு விமான நிலையமாக தரம் உயர்த்தப்பட்டு, அதனை பிரதமர் மோடி நாளை (சனிக்கிழமை) திறந்து வைக்க இருப்பது சந்தோசமாக இருக்கிறது. 

இது பெரும் பாராட்டுக்குரியது மேலும் விமான நிலையம் வாகைகுளத்தில் அமைய குரல் கொடுத்த அனைத்து தரப்பினருக்கும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன். மேற்கண்ட தகவலை, மதச்சார்பற்ற ஜனதா தள மாநில துணைத் தலைவரும், தூத்துக்குடி மூத்த வழக்கறிஞரான எம் சொக்கலிங்கம் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


மக்கள் கருத்து

RajsJul 27, 2025 - 05:32:17 PM | Posted IP 162.1*****

This air port will develop southern cities and all people can access easily all major cities easily.Appreciate all government and non governmental organisation for supporting the opening of new air port

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory