» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
டெல்லியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - பலி 6 ஆக அதிகரிப்பு, மீட்புப் பணி தீவிரம்!
ஞாயிறு 31, மே 2026 8:45:18 PM (IST)

டெல்லியின் சாகேத் மெட்ரோ நிலையம் அருகே உள்ள சைதுலாஜாப் பகுதியில் நான்கு மாடி வணிகக் கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது
டெல்லியின் சைதுலாஜாப் பகுதியில் உள்ள சாகேத் மெட்ரோ நிலையம் அருகே சனிக்கிழமை (மே 30) மாலை நான்கு மாடி வணிகக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. சைதுலாஜாப் வெஸ்டர்ன் மார்க் பகுதியில் உள்ள இந்த வணிகக் கட்டிடத்தில் மாணவர் தங்குமிடங்கள், பயிற்சி மையங்கள் இயங்கி வந்துள்ளன சைதுலாஜாபில் உள்ள வெஸ்டர்ன் மார்க்கில், பல்வேறு பேயிங் கெஸ்ட் தங்குமிடங்கள், பயிற்சி மையங்கள் மற்றும் மாணவர் உணவகங்கள் உள்ள இடத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.
சனிக்கிழமை இரவு கட்டிடம் இடிந்து விழுந்ததாக வந்த தகவலையடுத்து, தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), தீயணைப்புத் துறை மற்றும் டெல்லி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து இரவு முழுவதும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர் சாகேத் மெட்ரோ நிலையம் அருகே சனிக்கிழமை மாலையில் நான்கு மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க இரவு முழுவதும் மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டது.
இந்த மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படை, டெல்லி தீயணைப்புத் துறை, டெல்லி காவல்துறை, டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம், டெல்லி மாநகராட்சி, குடிமைப் பாதுகாப்பு மற்றும் கேட்ஸ் ஆம்புலன்ஸ் சேவை ஆகியவை ஈடுபட்டுள்ளன., சனிக்கிழமை இரவு 7:44 மணிக்கு கட்டிடம் இடிந்து விழுந்தது குறித்து டெல்லி பேரிடர் மீட்புப் படைக்கு அழைப்பு வந்துள்ளது. இதன்பின்னர் உடனடியாக மீட்புப்பணிகள் தொடங்கப்பட்டன.
இடிபாடுகளில் சிக்கியவர்களை விரைவாக மீட்க கனரக இயந்திரங்கள், ஹைட்ராலிக் கட்டர்கள், ஜிபிஎஸ் கேமராக்கள் மற்றும் மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டன. இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர் காயமடைந்து மீட்கப்பட்ட அனைவரும் சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இன்று அதிகாலை வரை இடிபாடுகளிலிருந்து 9 பேர் மீட்கப்பட்டனர். அவர்களில் எட்டு பேர் சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ரவி என்ற நபர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார் இடிபாடுகளுக்குள் இன்னும் சிலர் சிக்கியிருக்கலாம் என்பதால், அப்பகுதியில் மீட்புப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பஞ்சாப்பில் அஸ்தியை கரைக்கச் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்: லாரி மீது வேன் மோதி 9 பேர் சாவு!
ஞாயிறு 7, ஜூன் 2026 11:38:37 AM (IST)

சி.பி.எஸ்.இ., நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து கரப்பான் பூச்சி கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
ஞாயிறு 7, ஜூன் 2026 9:20:58 AM (IST)

நடத்தை சந்தேகத்தில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவர்: மகன் கெஞ்சியும் கேட்காமல் கொடூரம்!
சனி 6, ஜூன் 2026 12:07:22 PM (IST)

கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரம்: 7 பேர் பலி; 3 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட்!
சனி 6, ஜூன் 2026 11:54:23 AM (IST)

தனியார் நிறுவனத்தில் இளம்பெண் கொடூர கொலை: காதலை முறித்ததால் சக ஊழியர் வெறிச்செயல்!
சனி 6, ஜூன் 2026 11:04:35 AM (IST)

கடன்களுக்கான வட்டியில் மாற்றமில்லை: ரெப்போ வட்டி விகிதம் 5.25% ஆக நீடிப்பு - ஆர்பிஐ அறிவிப்பு
வெள்ளி 5, ஜூன் 2026 4:14:52 PM (IST)


