» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்
இன்னுயிரை இழக்கும் செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் : மு.க. ஸ்டாலின்
சனி 26, நவம்பர் 2022 4:41:46 PM (IST)
இந்தித் திணிப்பிற்கு எதிராக திமுக பொறுப்பாளர் தாழையூர் தங்கவேலு தீக்குளித்து உயிரிழந்த சம்பவத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்தித் திணிப்புக்கு எதிராக உயிர்த்தியாகம் செய்துள்ள தாழையூர் தங்கவேலுவுக்கு வீரவணக்கம்! இந்தித் திணிப்பை எதிர்த்து அரசியல்ரீதியாக - ஜனநாயக வழியில் தொடர்ந்து போராடுவோம்! ஏற்கனவே ஏராளமான தீரர்களை இழந்துவிட்டோம். இனி ஒரு உயிரையும் நாம் இழக்கக் கூடாது! போராட்ட வடிவமாக இன்னுயிரை இழக்கும் செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்.
பன்முகத்தன்மைக் கொண்ட அழகிய நாட்டைக் குறுகிய மனப்பான்மையால் குலைத்திட வேண்டாம். 'இந்தியைத் திணிக்காதே' எனக் காலங்காலமாய் நாம் உரத்துச் சொல்லும் முழக்கம் ஆதிக்க மனப்பான்மையில் இந்தியைத் திணிக்கும் ஒன்றிய அரசின் செவிகளுக்கும் இதயத்துக்கும் எட்டும்வரை நாம் ஓயப்போவதில்லை.
தாழையூர் தங்கவேலு அவர்களது குடும்பத்துக்கும் கழக உடன்பிறப்புகளுக்கும் இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நான் உயிருடன் இருக்கும் வரை இரட்டை இலை சின்னத்திற்கு ஆபத்து வர விடமாட்டேன்: சசிகலா
செவ்வாய் 24, ஜனவரி 2023 4:29:46 PM (IST)

அரசியலில் ஓய்வும் தற்கொலைக்குச் சமம்; இடைத் தேர்தலில் வெல்வதே இலக்கு: சீமான்
ஞாயிறு 22, ஜனவரி 2023 8:24:38 PM (IST)

திரிபுரா, நாகலாந்து, மேகாலயா 3 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் தேதிகள் அறிவிப்பு!
புதன் 18, ஜனவரி 2023 3:27:58 PM (IST)

ஜி.எஸ்.டி வரி விதிப்பால் இந்தியாவில் வறுமை அதிகரிக்கும்- டாக்டர் ராமதாஸ்
செவ்வாய் 17, ஜனவரி 2023 12:38:08 PM (IST)

ஆளுநர் விலக வேண்டும், இல்லையேல் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் : வைகோ அறிக்கை!
திங்கள் 9, ஜனவரி 2023 3:43:49 PM (IST)

மது விற்பனையை நம்பி ஆட்சி செய்வது தான் திராவிட மாடலா?- அன்புமணி கேள்வி!!
வியாழன் 5, ஜனவரி 2023 11:55:44 AM (IST)

samiDec 5, 2022 - 05:27:44 PM | Posted IP 162.1*****