» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்
நாட்டு மக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி எப்போது போடப்படும்? மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி
புதன் 22, டிசம்பர் 2021 4:50:58 PM (IST)
நாட்டில் பெரும்பாலான மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்படாத நிலையில், மத்திய அரசு பூஸ்டர் தடுப்பூசிகளை எப்போது போடத்தொடங்கும்? என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்நிலையில், நாட்டில் பெரும்பாலான மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்படாத நிலையில், மத்திய அரசு பூஸ்டர் தடுப்பூசிகளை எப்போது போடத்தொடங்கும்? என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். தடுப்பூசி தொடர்பாக ஒரு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலையும் ராகுல் காந்தி டுவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.
அதில், தற்போதுள்ள வேகத்தில் தடுப்பூசி செலுத்தினால், டிசம்பர் மாத இறுதிக்குள் 42 சதவீத மக்கள் மட்டுமே முழுமையாக தடுப்பூசி செலுத்துவார்கள் என்றும், கொரோனா 3வது அலையை சமாளிக்க வேண்டுமானால், டிசம்பர் மாத இறுதிக்குள் 60 சதவீத மக்கள் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் போட்டிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த இலக்கை எட்டுவதற்கு ஒரு நாளைக்கு 61 மில்லியன் (6.1 கோடி) டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் தற்போது மிகவும் குறைவான அளவே தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கடந்த ஏழு நாட்களில் சராசரியாக ஒரு நாளைக்கு 5.8 மில்லியன் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என்றும் அந்த தகவலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரயில் விபத்துக்குப் பொறுப்பேற்காமல் மோடி அரசு ஓடிவிட முடியாது: ராகுல் காந்தி
திங்கள் 5, ஜூன் 2023 12:13:24 PM (IST)

தமிழ் நாட்டு மக்களின் காதில் பூ சுற்றும் வேலையை இத்துடன் நிறுத்த வேண்டும் இபிஎஸ் அறிக்கை!
வெள்ளி 2, ஜூன் 2023 11:29:23 AM (IST)

இந்திய பணத்தின் நேர்மையில் சந்தேகம் : ப.சிதம்பரம் கருத்துக்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்
செவ்வாய் 30, மே 2023 5:15:03 PM (IST)

திராவிட மாடல் ஆட்சி தமிழகத்தின் இருண்ட காலம் : பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
ஞாயிறு 28, மே 2023 9:15:02 AM (IST)

ஜல்லிக்கட்டு வழக்குகளை அரசு திரும்பப் பெற வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்!!
செவ்வாய் 23, மே 2023 12:30:22 PM (IST)

கர்நாடக மக்களுக்கு நாடே நன்றி சொல்கிறது: ப.சிதம்பரம் கருத்து
சனி 13, மே 2023 4:48:52 PM (IST)
