» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
தமிழகத்தில் ரூ.6ஆயிரம் கோடி நகைக்கடன் தள்ளுபடி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
திங்கள் 13, செப்டம்பர் 2021 12:23:59 PM (IST)
தமிழகத்தில் ரூ.6ஆயிரம் கோடி நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். அவர் கூறியதாவது: கூட்டுறவு வங்கிகளில் ஒரு குடும்பத்திற்கு 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும். உண்மையான ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நகைக்கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும். இதன்படி ரூ.6 ஆயிரம் கோடி அளவிற்கான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.