» சினிமா » செய்திகள்

கரோனா நிவாரண பணிகளுக்கு விக்ரம் ரூ.30 லட்சம் நிதியுதவி!!

செவ்வாய் 18, மே 2021 4:53:04 PM (IST)

தமிழ்நாட்டில் கரோனா தொற்று தடுப்பு நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நடிகர் விக்ரம் 30 லட்ச ரூபாய் வழங்கியுள்ளார்.

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் பொருளாதாரம் மீண்டெழுவதற்கும், இந்தப் பேரிடரை எதிர்கொள்வதற்கும் தமிழ்நாடு அரசு கூடுதலான நிதி ஆதாரங்களைச் செலவிட வேண்டிய தேவை உள்ளது. 

எனவே, அரசின் முனைப்பான முயற்சிகளுக்கு நமது சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரும்  தங்களால் இயன்ற வகையில் உதவிட முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்கிட வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்தார். அந்த வேண்டுகோளுக்கேற்ப, திரைப்பட நடிகர் விக்ரம் கரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இன்று (17-5-2021) வங்கிப் பரிவர்த்தனை மூலமாக 30 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory