» சினிமா » செய்திகள்

கரோனா தடுப்புப் பணிகளுக்காக ரூ. 25 லட்சம் : நடிகர் அஜித் வழங்கல்

வெள்ளி 14, மே 2021 11:04:51 AM (IST)

தமிழக அரசின் கரோனா தடுப்புப் பணிகளுக்காக ரூ. 25 லட்சம் வழங்கியுள்ளார் நடிகர் அஜித்.

கரோனா தொற்றிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க முதல்வரின் நிவாரண நிதிக்கு தராளமாக உதவ வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தாா். அதன் அடிப்படையில் திரைத்துறையினர் பலரும் நிவாரண நிதியை வழங்கி வருகிறார்கள்.

இந்நிலையில் தமிழக அரசின் கரோனா தடுப்புப் பணிகளுக்காக ரூ. 25 லட்சம் வழங்கியுள்ளார் நடிகர் அஜித். வங்கி பரிவர்த்தனை மூலமாக கரோனா நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் நிதி அனுப்பியுள்ளார்.

முன்னதாக வெளியிட்ட அரசு செய்திக்குறிப்பில், ரூ. 2.5 கோடி நன்கொடை என்றிருந்த தகவல், பின்னர் ரூ. 2.5 லட்சம் எனத் திருத்தி வெளியிடப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory