» சினிமா » செய்திகள்
தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு வீரர் பயோபிக்? மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம்!!
புதன் 10, பிப்ரவரி 2021 4:14:08 PM (IST)

மாரிசெல்வராஜ் செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்க உள்ள படம் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரரின் பயோபிக் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
கதிர், ஆனந்தி நடிப்பில் பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது பரியேறும் பெருமாள். இந்தப் படம் கொடுத்த வெற்றியின் அறுவடையாக தனுஷை இயக்கும் வாய்ப்பை இரண்டாவது படத்திலேயே பெற்றார். அப்படி, தனுஷ் நடிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் ரிலீஸூக்கு தயாராகிவருகிறது. தற்பொழுது படத்தின் டப்பிங் பணிகளை முடித்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் தனுஷ். மாஞ்சோலை கொலை சம்பவத்தை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகிறதாம். ஏப்ரல் 09ஆம் தேதி படத்தை வெளியிட டார்கெட் வைத்திருக்கிறது படக்குழு.
இப்படத்தைத் தொடர்ந்து, துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குகிறார் மாரிசெல்வராஜ். ஸ்போர்ட்ஸ் டிராமா என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், குறிப்பாக கால்பந்து மையமாகக் கொண்ட கதை. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபலமான கபடி வீரர் மனத்தி கணேசன். அரசின் அர்ஜூனா விருது பெற்றவர். தற்பொழுது இளம் கபடி வீரர்களுக்கு பயிற்சியும் ஆலோசனையும் வழங்கிவருகிறார். இவரின் பயோபிக்கை தான் மாரி செல்வராஜ் இயக்குகிறார். மனத்தி கணேசனாக துருவ் விக்ரம் நடிக்கிறார். கூடுதலாக, படத்தின் படப்பிடிப்பு ஏப்ரலில் துவங்குகிறது. இந்தப் படத்தை ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சென்னையில் ரஜினியின் அண்ணாத்தே படப்பிடிப்பு?
வெள்ளி 5, மார்ச் 2021 12:18:47 PM (IST)

தமிழ் படத்தில் அதிரடி ஹீரோ ஆன ஹர்பஜன் சிங்!!
வியாழன் 4, மார்ச் 2021 12:39:32 PM (IST)

டாப்ஸி, அனுராக் காஷ்யப் வீடுகளில் வருமான வரி சோதனை
புதன் 3, மார்ச் 2021 8:57:26 PM (IST)

இயக்குநர் ஷங்கருடன் இணைந்த கார்த்திக் சுப்பராஜ்
புதன் 3, மார்ச் 2021 5:48:16 PM (IST)

கலைமாமணி விருது பெற்ற கலைஞர்களுக்கு சரத்குமார் வாழ்த்து!!
சனி 20, பிப்ரவரி 2021 3:45:37 PM (IST)

சக்ரா படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கம்
வியாழன் 18, பிப்ரவரி 2021 5:17:12 PM (IST)
