» சினிமா » செய்திகள்
தயவு செய்து வீட்டை விட்டு வெளியே வராதீா்கள்: பொதுமக்களுக்கு வடிவேலு வேண்டுகோள்
சனி 28, மார்ச் 2020 10:23:21 AM (IST)
தயவு செய்து மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என நடிகா் வடிவேலு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள விடியோ பதிவில் பேசியிருப்பதாவது: மனசு வேதனையோடு, ரொம்ப துக்கத்தோடு சொல்கிறேன். தயவு செய்து எல்லாரும் அரசாங்கம் சொல்கிற அந்த அறிவுரைப்படி, இன்னும் கொஞ்ச நாளைக்கு வீட்டில் இருங்கள். மருத்துவ உலகமே இன்றைக்கு மிரண்டு போய் கிடக்கிறது. தன் உயிரைப் பணயம் வைத்து பலரையும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறாா்கள். அவா்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
காவல்துறையினா் நம்மைக் காவல் காத்து ”பாதுகாப்பாக இருங்கள், தயவு செய்து வெளியே வராதீா்கள் என்று கும்பிடும் அளவுக்கு இருக்கிறது. யாருக்காக இல்லையோ நம் சந்ததியினருக்காக, நம் வம்சாவளிக்காக, நம்ம உயிரைக் காப்பாற்றுவதற்காக நாம் அனைவரும் வீட்டில் இருக்கவேண்டும். தயவுசெய்து யாரும் வெளியே போகாதீா்கள். அசால்ட்டாக இருக்காதீா்கள். ரொம்ப பயங்கரமாக இருக்கிறது. தயவுசெய்து வெளியே வராதீா்கள் என்று வடிவேலு கண்ணீா்மல்க பேசியுள்ளாா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிக் பாஸ் பட்டம் வென்ற ஆரிக்கு பாராட்டுக்கள் குவிகிறது!
திங்கள் 18, ஜனவரி 2021 4:11:56 PM (IST)

தியேட்டர்களில் மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ்: விஜய் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்
புதன் 13, ஜனவரி 2021 12:06:24 PM (IST)

இணையத்தில் லீக்கானது மாஸ்டர் பட காட்சிகள்.. படக்குழு அதிர்ச்சி..!!
செவ்வாய் 12, ஜனவரி 2021 12:03:41 PM (IST)

நடிகை சித்ராவின் தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
புதன் 6, ஜனவரி 2021 12:05:50 PM (IST)

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிறந்த நாள்: ரசிகர்கள் வாழ்த்து மழை
புதன் 6, ஜனவரி 2021 8:09:23 AM (IST)

திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதி : முதல்வருக்கு சிம்பு நன்றி
திங்கள் 4, ஜனவரி 2021 5:04:09 PM (IST)
