» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
கைப்பந்து போட்டி: சவேரியார்புரம் அணி வெற்றி!
திங்கள் 17, ஜனவரி 2022 12:00:43 PM (IST)
சாத்தான்குளம் அருகே மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் சவேரியார்புரம் அணி முதல் பரிசை வென்றது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள இளையனேரியில் பொங்கல் திருநாளையொட்டி கைப்பந்து போட்டிகள் 2 நாள்கள் நடைபெற்றது. இதில் சவேரியார்புரம், இளையனேரி, கலுங்குவிளை, பேய்க்குளம், நெடுங்குளம் உள்ளிட்ட 12 அணிகள் கலந்து கொண்டன. இறுதி போட்டியில் சவேரியார்புரம் அணியும், இளையனேரி அணியும் மோதின. இதில் சவேரியார்புரம் அணி வெற்றி பெற்றது.
2ஆம் பரிசு இளையனேரி அணிக்கும், 3ஆம் பரிசு கலுங்குவிளை அணிக்கும் கிடைத்தது. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு நெடுஞ்சாலைத்துறை நுகர்வோர் குழு உறுப்பினர் போனிபாஸ் கலந்து கொண்டு முதலிடம் பெற்ற அணிக்கு கோப்பை மற்றும் ரூ.7ஆயிரம் ரொக்கமும், 2ஆம் இடம் பெற்ற இளையனேரி அணிக்கு கோப்பை மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கமும், 3ஆம் இடம் பெற்ற கலுஙகுவிளை அணிக்கு ரூ.3ஆயிரம் பரிசு வழங்கினார். விழாவில் ரீகன், சேவியர், ராஜா, பட்டுராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.