» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
மாநில அளவிலான கூடைப் பந்து போட்டி : தூத்துக்குடி கிரஸண்ட் பள்ளி வெற்றி
திங்கள் 3, ஜனவரி 2022 12:00:50 PM (IST)
தூத்துக்குடியில் நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் கிரஸண்ட் பள்ளி அணி கோப்பையை வென்றது.
தூத்துக்குடியில் க்ராசியன் கூடைப்பந்து கழகம் சார்பில் 13வயதினருக்கான மாநில கூடைப் பந்துப் போட்டிகள் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல பகுதிகளை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன. இறுதிப் போட்டியில் தூத்துக்குடி கிரஸண்ட் பள்ளி அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிக்கு பரிசுக் கோப்பையும், ரூ.15ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கினார். கோப்பையை வென்ற மாணவர்கள், பயிற்சி அளித்த பயிற்சி ஆசிரியர் பிரதீப் குமார் ஆகியோரை பள்ளியின் தாளாளர் ஹைதர் அலி, முதல்வர் சையத் அலி ஆகியோர் பாராட்டினர்.