» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

மாநில அளவிலான கூடைப் பந்து போட்டி : தூத்துக்குடி கிரஸண்ட் பள்ளி வெற்றி

திங்கள் 3, ஜனவரி 2022 12:00:50 PM (IST)



தூத்துக்குடியில் நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் கிரஸண்ட் பள்ளி அணி கோப்பையை வென்றது. 

தூத்துக்குடியில் க்ராசியன் கூடைப்பந்து கழகம் சார்பில் 13வயதினருக்கான மாநில கூடைப் பந்துப் போட்டிகள் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல பகுதிகளை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன. இறுதிப் போட்டியில் தூத்துக்குடி கிரஸண்ட் பள்ளி அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது. 

பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிக்கு பரிசுக் கோப்பையும், ரூ.15ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கினார். கோப்பையை வென்ற மாணவர்கள், பயிற்சி அளித்த பயிற்சி ஆசிரியர் பிரதீப் குமார் ஆகியோரை பள்ளியின் தாளாளர் ஹைதர் அலி, முதல்வர் சையத் அலி ஆகியோர் பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory