» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லையில் மருத்துவ கழிவுகளை கொட்டிய மருந்து விற்பனை பிரதிநிதி கைது
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 8:35:28 AM (IST)
நெல்லையில் மருத்துவ கழிவுகளை கொட்டிய விவகாரத்தில் மருந்து விற்பனை பிரதிநிதி கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட ரெட்டியார்பட்டி நான்குவழிச்சாலை அருகில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு இருந்தது. ஏற்கனவே நெல்லை அருகே கொட்டப்பட்ட கேரள மருத்துவ கழிவுகள் அம்மாநிலத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டது. இந்த நிலையில் நெல்லையில் மீண்டும் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பெருமாள்புரம் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் பாளையங்கோட்டை சமாதானபுரத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (35) என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் அவர் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வருவதும், சம்பவத்தன்று அவர் விற்பனைக்காக வீட்டில் வைத்திருந்த மருந்துகள் காலாவதி ஆனதால், அந்த மருந்துகளை ரெட்டியார்பட்டி நான்கு வழிச்சாலை அருகில் கொட்டிச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை-திருச்செந்தூர் இடையே 2 ரயில்கள் மார்ச் 20 முதல் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு!
வியாழன் 13, மார்ச் 2025 8:36:12 PM (IST)

திருநெல்வேலி மாவட்ட சுகாதார துறையில் 48 பணியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு
வியாழன் 13, மார்ச் 2025 8:20:44 PM (IST)

சீமான் வீட்டுப் பணியாளர், பாதுகாவலருக்கு ஜாமீன் : சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
வியாழன் 13, மார்ச் 2025 5:29:07 PM (IST)

இந்தியா முழுவதும் பொது தொடர்பு மொழியாக இந்தியை பயன்படுத்தலாம்: டி.டி.வி.தினகரன்
வியாழன் 13, மார்ச் 2025 5:02:14 PM (IST)

மாணவர்கள் உயர்கல்வி பயில ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்!
வியாழன் 13, மார்ச் 2025 3:59:08 PM (IST)

செஸ் வீரர் பிரணவ் வெங்கடேஷ்-க்கு ரூ.20 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
வியாழன் 13, மார்ச் 2025 3:33:00 PM (IST)
