» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக புகார்: சீமானுக்கு போலீஸ் சம்மன்!
திங்கள் 10, பிப்ரவரி 2025 5:56:07 PM (IST)
பெரியார் குறித்து அவதூறாக பேசியது குறித்து விசாரிக்க நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வடலூர் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
நாம் தமிழர் கட்சியின் கடலூர் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 8ம்தேதி வடலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, பெரியாரைப் பற்றி அவதூறான கருத்துக்களை கூறினார்.
இந்நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடலூர் மாவட்ட திராவிடர் கழக தலைவர் தண்டபாணி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் புகார் மனு கொடுத்தார். அந்த மனுவின் அடிப்படையில் வடலூர் போலீசார், பொது இடத்தில் அமைதியை குலைக்கும் விதமாக பேசுவது, இரு பிரிவினருக்கு இடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசுவது ஆகிய இரு பிரிவுகளின் கீழ் சீமான் மீது வழக்குப்பதிந்தனர்.
இந்நிலையில் சீமான் வடலூர் காவல்நிலையத்தில் வருகிற வெள்ளிக்கிழமை 14ம்தேதி நேரில் ஆஜராகி பதில் அளிக்க வேண்டும் என அவருக்கு காவல்துறை சார்பில் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று நேரில் சம்மன் வழங்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை-திருச்செந்தூர் இடையே 2 ரயில்கள் மார்ச் 20 முதல் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு!
வியாழன் 13, மார்ச் 2025 8:36:12 PM (IST)

திருநெல்வேலி மாவட்ட சுகாதார துறையில் 48 பணியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு
வியாழன் 13, மார்ச் 2025 8:20:44 PM (IST)

சீமான் வீட்டுப் பணியாளர், பாதுகாவலருக்கு ஜாமீன் : சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
வியாழன் 13, மார்ச் 2025 5:29:07 PM (IST)

இந்தியா முழுவதும் பொது தொடர்பு மொழியாக இந்தியை பயன்படுத்தலாம்: டி.டி.வி.தினகரன்
வியாழன் 13, மார்ச் 2025 5:02:14 PM (IST)

மாணவர்கள் உயர்கல்வி பயில ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்!
வியாழன் 13, மார்ச் 2025 3:59:08 PM (IST)

செஸ் வீரர் பிரணவ் வெங்கடேஷ்-க்கு ரூ.20 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
வியாழன் 13, மார்ச் 2025 3:33:00 PM (IST)
