» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து சீரானது: சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

புதன் 23, அக்டோபர் 2024 12:43:46 PM (IST)

குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து சீரானதால், சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று காலை முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று கொட்டித் தீர்த்த கன மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை அடி வாரத்தில் உள்ள குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக, குற்றாலம் பகுதியில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நேற்று காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. 

இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் நேற்று குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் இன்று காலை தண்ணீர் வரத்து சீரானது. இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று காலை 8 மணி முதல் அனுமதி வழங்கப் பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory