» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் திடீர் மாற்றம்: நெல்லை சரக டிஐஜி மூர்த்தி உத்தரவு!

புதன் 23, அக்டோபர் 2024 12:24:31 PM (IST)

சாத்தான்குளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜேசு ராஜசேகரன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.  

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ஆக பணியாற்றி வருபவர் ஜேசுராஜசேகரன். இவர் இதற்கு முன்பு நாகர்கோவில் புதுக்கடை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். அப்போது அங்கு சிலரிடம் வேலை வாங்கித் தருவதாக பணம் வாங்கி ஏமாற்றியதாக கூறப்படுகிறது. 

இது குறித்து பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் கன்னியாகுமரி மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்துள்ளனர். இது தாெடர்பாக எஸ்பி விசாரணை நடத்தியதில் அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில், ஜேசு ராஜசேகரனை காத்திருப்போர் பட்டியலுக்கு இடமாற்றம் செய்து நெல்லை சரக டிஐஜி மூர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory