» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சிறுமியை எரித்துக்கொன்ற பெண்ணுக்கு 5 ஆண்டு சிறை: மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

வியாழன் 28, செப்டம்பர் 2023 11:57:37 AM (IST)

சிறுமியை எரித்துக்கொன்ற பெண்ணுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது.

நெல்லை மாவட்டம் பணகுடி யாதவர் தெருவை சேர்ந்தவர் நாராயணகிருஷ்ணன். இவரது மகள் பாஞ்சாலி (வயது 18). நாராயணகிருஷ்ணனின் தாய் சீதையிடம் அதே ஊரை சேர்ந்த ராஜகோபால் (65) என்பவர் ரூ.10 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். இதுதொடர்பாக 2 குடும்பத்தினருக்கும் பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது.

கடந்த 2010-ம் ஆண்டு காலையில் வீட்டில் பாஞ்சாலி மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டுக்குள் வந்த ராஜகோபால், அவரது மனைவி ராதாசெல்வம் (58) மற்றும் ஒரு சிறுவன் ஆகியோர் பாஞ்சாலியிடம் தகராறு செய்து அவதூறாக பேசி மண்எண்ணெய்யை ஊற்றி அவரை அருகில் உள்ள விறகு அடுப்பில் தள்ளிவிட்டுள்ளனர். இதில் பாஞ்சாலி உடல்முழுவதும் தீப்பிடித்து எரிந்து உடல் கருகி உயிரிழந்தார். இதுகுறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை நெல்லை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கை நீதிபதி விஜயகுமார் விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட ராதாசெல்வத்திற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். அபராதத்தை கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் ராஜகோபால் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜெயபிரபா ஆஜரானார். இதில் சம்பந்தப்பட்ட சிறுவன் தொடர்பாக நெல்லை சிறார் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory