» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குருவானவரை மாற்றக் கோரி சபை மக்கள் 2வது நாளாக போராட்டம்: தூத்துக்குடியில் பரபரப்பு

வியாழன் 28, செப்டம்பர் 2023 8:21:32 AM (IST)



தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் சி.எஸ்.ஐ., ஆலயத்தில் குருவானவரை மாற்றக் கோரி சபை மக்கள் 2வது நாளாக உண்ணாவிரத  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தூத்துக்குடி  கிருஷ்ணராஜபுரம் வட்டகோவிலில் சுமார் 450 குடும்பத்தினர் அங்கம்  வகித்து வரும் தூத்துக்குடியின் மிக முக்கிய திருச்சபையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த ஆலயத்தின் குருவானவராக ஜெபக்குமார் ஜாலி என்பவர் கடந்த ஜூன் மாதம் பதவியேற்றுள்ளார் இந்த நிலையில் அவர் வந்ததிலிருந்து சபைக்குள் பிரிவினையை ஏற்படுத்தி இருதரப்பினராக செயல்படவும் இதில் ஒரு தரப்பினருக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தில்  உறுப்பினர் 3 பேர் தகுதி இழப்பு ஏற்பட்டதால் அவர்களின் 3 பேரை திருமண்டல மாடுரேட்டர் கமிஷனரி யாரிடமும் ஒப்புதல் பெறாமல் தானாக தன்னிச்சையாக வட்ட கோவிலுக்கு சம்பந்தமில்லாத நபரை திருமண்டல  செயற்குழு உறுப்பினராக நியமித்ததாகவும் இதனை வட்ட கோவிலில் செயலாளர் பீட்டர் என்பவர் நியாயம் கேட்க சேகரத் தலைவர் ஜெபக்குமார்ஜாலி இடம் கேட்க சென்ற போது அவரது வீட்டில் இருந்த அவரது மாமனார் சேகர செயலாளர் பீட்டரை செருப்பை காட்டி அடிக்க வந்ததாகவும், 

இதனால் சபை மக்கள் ஒன்று சேர்ந்து நாங்கள் தேர்ந்தெடுத்து வைத்துள்ள செயலாளர் பீட்டரை எப்படி நீங்கள் செருப்பை வைத்து அடிக்க வரலாம் என கூறி நியாயம் கேட்டதாகவும் ஆனால் சேகரத் தலைவர் குருவானவர் ஜெபக்குமார் ஜாலி அப்படித்தான் செய்வேன் என  அராஜகமாக பேசியதாகவும் இதனால்  தங்களது சபைக்கு இந்த குருவானவர் தேவையில்லை இவரை உடனே மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை விடுத்து கடந்த ஒரு மாத காலமாக பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தனர். 

இதனால் மாவட்ட நிர்வாகம் பல்வேறு சமாதான கூட்டங்களையும் ஏற்பாடு செய்து இரு தரப்பினரையும் பேசி சமாதானமாக செல்ல அறிவுறுத்தியுள்ளனர் ஆனால் குருவானவர் தரப்பினர் எவ்வித சமாதானத்துக்கும் வர மறுத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் தூத்துக்குடி நாசரேத் சிஎஸ்ஐ திருமண்டலம் தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் எபினேசர் ஆலயம் எனும் வட்டக்கோவில் ஆலய சபை மக்களின் கோரிக்கையை ஏற்க மறுத்ததால் நேற்று இரவு  (27.9.23)  முதல் தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் எபினேசர் ஆலயம் எனும் வட்ட கோவிலில் சபை மக்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி உள்ளனர் 



கோவில் வளாகத்திற்கு வெளியே  உண்ணாவிரதம் இருக்க காவல்துறை அனுமதி மறுத்ததால் கோவில் உள்ளேயே கிறிஸ்தவ பாடல்கள் பாடி பிரார்த்தனைகள் ஏறெடுத்து கொண்டு உள்ளிருப்பு உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றனர் இந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.  இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 


மக்கள் கருத்து

A.ThangarajaSep 29, 2023 - 09:59:06 PM | Posted IP 172.7*****

குருவானவர்களூக்கு பள்ளி செயலாளர் மற்றும் மனைவிக்கு அரசு வேலை வழங்காமல் இருந்தால் பிரச்சினை வராது மற்றும் மூன்று வருடம் சேகரத்திலூம் அடுத்த மூன்று வருடம் வட இந்தியாவுக்கு ஊழியத்துக்கு அனுப்பினால் ஒரு காலமும் பிரச்சினை வராது

ஒரு நாள்Sep 29, 2023 - 04:02:19 PM | Posted IP 172.7*****

கூட தாங்காது. மக்கள் உணவுக்கு பழகி விட்டனர்

Voice of RevivalSep 29, 2023 - 12:09:54 AM | Posted IP 172.7*****

போதகர் சபையாரை கண்டித்தது அந்தக் காலம். சபையார் போதகரை கண்டிப்பது இந்தக் காலம். ஏனென்றால் இது கடைசி காலம்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory