» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மீன் லோடு வேன் - கேஸ் லாரி மோதி விபத்து ஒருவர் பலி- 5பேர் படுகாயம்!
புதன் 27, செப்டம்பர் 2023 5:06:06 PM (IST)
வல்லநாடு அருகே மீன் லோடு ஏற்றி வந்த வேனும், தனியார் கேஸ் டேங்கர் லாரியும் மோதி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
நெல்லை மாவட்டம் கோபாலசமுத்திரம் அகதிகள் முகாம் பகுதியை சேர்ந்த லட்சுமணன் மகன் செல்வராஜ் (60). இவரும், நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள சிங்கம்பாறை ராசா சேவியர் மகன் மில்டன் (36), ஆரோக்கிய ரூபன் (29), முக்கூடல் இலந்தைகுளம் லூர்து மகன் வர்கீஸ் (37), திருவேங்கடநாதபுரம் பாலாஜி நகர் பெருமாள் மகன் சந்திரன் (32), மாரியப்பன் மகன் பெரிய துரை (27) ஆகியோர் நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடிக்கு சென்றனர்.
அங்கு மீன்களை ஏற்றிக் கொண்டு லாரியில் நெல்லை நோக்கி வந்து கொண்டிருந்தனர். வேனை டிரைவர் மில்டன் ஓட்டி சென்றார். நேற்று அதிகாலை 1 மணி அளவில் நெல்லை- தூத்துக்குடி நான்கு வழிச்சாலை வல்லநாடு துப்பாக்கி சுடுதளம் தாண்டி முன்னால் சென்று கொண்டிருந்த தனியார் கேஸ் லாரியை வேன் முந்தி சென்றுள்ளது. உடனே இடது புறமாக வேனை டிரைவர் திருப்பி உள்ளார். இதனால் டேங்கர் லாரியின் முன்புறத்தில் வேன் மோதி விபத்துக்குள்ளானது.
கண்இமைக்கும் நேரத்தில் சாலையில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் இருந்த ஆரோக்கிய ரூபன், மில்டன், வர்கீஸ், சந்திரன், பெரிய துரை ஆகிய 5 பேரும் படுகாயத்துடன் ரத்தவெள்ளத்தில் சாலையில் கிடந்தனர். மேலும் வேனில் இருந்த மீன்கள் சாலையில் சிதறி கடந்தன. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து முறப்பநாடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செல்வராஜ் உடலை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயங்களுடன் கிடந்த மற்ற 5 பேரையும் போலீசார் பாதுகாப்பாக மீட்டு அதே மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கேஸ் டேங்கர் லாரி டிரைவர் புதுக்கோட்டை கீரனூர் சின்னையா மகன் சண்முகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி என்.டி.பி.எல். ஊழியர்கள் 23வது நாளாக ஸ்ட்ரைக் : மின் உற்பத்தி முற்றிலும் பாதிப்பு
வெள்ளி 9, மே 2025 11:25:02 AM (IST)

கண்ணீர் வேண்டாம் தம்பி!.. இரு கைகளை இழந்த மாணவனின் கோரிக்கையை ஏற்ற முதல்வர்!
வியாழன் 8, மே 2025 5:31:15 PM (IST)

நெல்லையப்பர் கோயிலில் வருஷாபிஷேக விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 8, மே 2025 3:56:15 PM (IST)

அமைச்சர் துரைமுருகனிடம் இருந்து கனிமவளத் துறை பறிப்பு ஏன்? - பரபரப்பு தகவல்கள்
வியாழன் 8, மே 2025 12:47:45 PM (IST)

டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு: மே 13 முதல் விண்ணப்பிக்கலாம்
வியாழன் 8, மே 2025 12:03:27 PM (IST)

ரெட்ரோ படத்தின் வெற்றிவிழா : அகரம் அறக்கட்டளைக்கு ரூ. 10 கோடி வழங்கிய சூர்யா!
வியாழன் 8, மே 2025 11:54:49 AM (IST)
