» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக அமருவார்: அண்ணாமலை நம்பிக்கை

புதன் 27, செப்டம்பர் 2023 12:30:56 PM (IST)

வரும் 2024 மக்களவைத் தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக அமருவார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாலை நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

தமிழகம் முழுவதும் ‘என் மண் என் மக்கள்’ என்ற நடைப்பயணத்தை தொடங்கி பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை மக்களைச் சந்தித்து வருகிறாா். அதன்படி, கோவை மாவட்டத்தில் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். 

இந்த நடைப்பயணத்தின் போது, வருகிற 2024 மக்களவைத் தோ்தலில் 400 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக அமருவார். தமிழகத்தில் இருந்து 39 எம்.பி.க்களை பாஜக தேசிய ஜனநாயகக் கூட்டணி மூலம் மக்களவைக்கு கொண்டுச் செல்வோம். 

வரும் தேர்தலில் பாஜகவின் வெற்றியை தடுக்கும் பொய் பிரசாரங்கள் அவிழ்த்து விடப்படும். அதனை நாம் முறியடிக்க வேண்டும் என்றார்.2014 ஆம் ஆண்டு உலக அளவில் 11 ஆவது இடத்தில் இருந்த நாட்டின் பொருளாதாரத்தை கடந்த 9 ஆண்டுகளில் 5 ஆவது இடத்திற்கு கொண்து வந்துள்ளார் பிரதமர் மோடி. 

சனாதன தர்மம் என்ன என்பது தெரியாமலேயே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசி வருவதாக அண்ணாமலை தெரிவித்தார். நடிகர் கமலஹாசன் திறமையான நடிகர். ஆனால் தற்போது திமுகவில் சேருவதா அல்லது காங்கிரஸ் கட்சியில் சேருவதா என்ற குழப்பத்தில் இருந்து வருவதாக மேலும் அவர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory