» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சமூக வலைதளத்தில் பிரச்சினையை தூண்டும் வகையில் வீடியோ பதிவிட்ட வாலிபர் கைது

புதன் 27, செப்டம்பர் 2023 11:37:16 AM (IST)

நெல்லை அருகே இருதரப்பினரிடையே பிரச்சினையை தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.

நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளம் தாமரைச்செல்வி பகுதியை சேர்ந்தவர் அழகுபாண்டி (20). இவர் இருதரப்பினரிடையே பிரச்சினையை தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவு செய்து இருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த முன்னீர்பள்ளம் போலீசார் அழகுபாண்டி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதுபோன்று பொதுஅமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி., சிலம்பரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory