» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்ற டாஸ்மாக் ஊழியர்கள் 58 பேர் மீது நடவடிக்கை!
திங்கள் 18, செப்டம்பர் 2023 12:19:20 PM (IST)
காஞ்சிபுரத்தில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றதாக 45 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 13 பேர் டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளனர் என்று டாஸ்மாக் காஞ்சிபுரம் மாவட்ட வடக்கு மேலாளர் ஷியாம் சுந்தர் கூறினார்.
தமிழ்நாடு டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் விசாகன், டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை கூடுதல் விலை வைத்து விற்கப்படுகிறதா, வெளிநபர்கள் பணிபுரிகின்றனரா என்று சோதனை செய்து நடவடிக்கை எடுக்குமாறு தமிழகம் முழுவதும் அரசு டாஸ்மாக் மாவட்ட மேலாளர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட மேலாளர் ஷியாம்சுந்தர் அதிரடி சோதனை மேற்கொண்டார்.
இதில், தாம்பரம் மற்றும் சோழிங்கநல்லூர் பகுதிகளில் உள்ள 11 கடைகளில் பணியாளர்கள் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதை கண்டுபிடித்தார். இதனைத் தொடர்ந்து 11 விற்பனையாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். மேலும் ஆலந்தூரில் 1 கடையும், குன்றத்தூரில் 4 கடைகளும், பல்லாவரத்தில் 2 கடைகளும், சோழிங்கநல்லூரில் 4 கடைகளும், பெரும்புதூரில் 1 கடையும், தாம்பரத்தில் 6 கடைகளும் என மொத்தம் 18 கடைகளில் மாவட்ட மேலாளர் எஸ்.பி.சியாம்சுந்தர் அதிரடி சோதனை மேற்கொண்டார். அப்போது 18 கடைகளிலும் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதை கண்டுபிடித்தார். உடனடியாக அந்த 18 கடைகளிலும் பணியாற்றி வந்த 18 அரசு டாஸ்மாக் விற்பனையாளர்களை தற்காலிக பணிநீக்கம் செய்யும் உத்தரவிட்டார்.
இந்நிலையில் டாஸ்மாக் மதுபான கடைகளில் பணியாளர்கள் கடைகளுக்கு சம்பந்தமில்லாத வெளிநபர்களை விற்பனை பணியில் ஈடுபடுத்தி வருகின்றனரா என்றும் சோதனை மேற்கொண்டார். இந்த சோதனையின் போது ஆலந்தூரில் 11 கடைகளிலும், பல்லாவரத்தில் 1 கடையிலும், சோழிங்கநல்லூரில் 1 கடையிலும், தாம்பரத்தில் 4 கடைகளிலும் என மொத்தம் 7 கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டார்.
இந்த சோதனையில் 7 கடைகளில் அரசு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு சம்பந்தம் இல்லாமல் வெளிநபர்களை வைத்து விற்பனை செய்யும் பணியில் ஈடுபடுத்தியதற்காக 21 டாஸ்மாக் விற்பனையாளர்களை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார். இதன்படி 45 விற்பனையாளர்களை தற்காலிக பணி நீக்கமும், 13 விற்பனையாளர்கள் பணியிட மாற்றம் என மொத்தம் 58 விற்பனையாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு மாவட்ட மேலாளர் சியாம்சுந்தர் உத்தரவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கேரளாவில் பஸ்கள் ஓடவில்லை: கோவையில் இருந்து புறப்பட்ட 50 பஸ்கள் எல்லையில் நிறுத்தம்!
புதன் 9, ஜூலை 2025 11:36:56 AM (IST)

நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயிலில் திடீர் புகை: பயணிகள் அதிர்ச்சி!
புதன் 9, ஜூலை 2025 11:16:50 AM (IST)

அதிகாரிகள் கொடுமையால் சத்துணவு அமைப்பாளர் தற்கொலை: அன்புமணி குற்றச்சாட்டு
புதன் 9, ஜூலை 2025 10:46:28 AM (IST)

தமிழகத்தில் அரசு பஸ்கள் வழக்கம்போல் இயக்கம்: போக்குவரத்துத்துறை அமைச்சர் தகவல்!
புதன் 9, ஜூலை 2025 10:35:19 AM (IST)

நாங்குநேரி உட்பட 4 சுங்கச் சாவடிகளில் அரசு பஸ்களுக்கு தடை: உயர்நீதிமன்றம் உத்தரவு
புதன் 9, ஜூலை 2025 10:27:39 AM (IST)

திருச்செந்தூர் கோவில் மட்டுமல்ல மாதா கோவில் திருவிழாவாக இருந்தாலும் கடமையை செய்வேன்: கனிமொழி எம்பி
செவ்வாய் 8, ஜூலை 2025 8:12:52 PM (IST)
