» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தாயை கார் ஏற்றிக் கொலை செய்த மகன் கைது

புதன் 22, மார்ச் 2023 5:14:00 PM (IST)

நெல்லையில் தாயை கார் ஏற்றிக் கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா அச்சன்புதூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சங்கரநாராயணன் மனைவி முருகம்மாள் (65). இவர்களது மகன்கள் சங்கர் என்ற மோகன் (45), ராம்குமார், உதயமூர்த்தி (38).  சங்கரநாராயணன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இலத்தூர் விலக்கு பகுதியில் நடந்த ஒரு விபத்தில் சிக்கி உயிரிழந்தார். 

இதுதொடர்பான வாகன  விபத்து நஷ்ட ஈடு கோரும் வழக்கு நெல்லை கோர்ட்டில் நடந்து வருகிறது.  அந்த வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜராவதற்காக கடந்த 3-ந் தேதி முருகம்மாள், தனது இளைய மகன் உதயமூர்த்தியுடன் மோட்டார் சைக்கிளில் தென்காசிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர்களின் பின்னால் காரில் சங்கர் வந்தார். அவர் திடீரென்று மோட்டார் சைக்கிள் மீது தனது காரை ஏற்றினார். 

இந்த சம்பவத்தில் முருகம்மாள் பலியானார். உதயமூர்த்தி படுகாயம் அடைந்தார். இந்த கொலை தொடர்பாக இலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரை தேடி வந்தனர். மேலும் தென்காசி துணை காவல் கண்காணிப்பாளர்  நாகசங்கர், இன்ஸ்பெக்டர் வேல்கனி தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று இலத்தூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் போது, சங்கரை  கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.


மக்கள் கருத்து

சங்கர்Mar 22, 2023 - 06:37:35 PM | Posted IP 162.1*****

என்றாலே பிரச்சினைதான் போல...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory