» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மகளிர் உரிமைத் தொகை குறித்து அவதூறு கருத்து : பாஜக நிர்வாகி கைது!
புதன் 22, மார்ச் 2023 4:21:32 PM (IST)
குடும்ப தலைவிக்கு வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகை குறித்து சமூக வலைதளத்தில் தவறான கருத்து பதிவிட்டதாக பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழக சட்டபேரவையில் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரில் நிதி அமைச்சர். குடும்ப தலைவிக்கு உரிமைத் தொகையாக ரூ.1000 செப்டம்பர் மாதம் 15இல் வழங்ககப்பட உள்ளதாக தெரிவித்தார். இந்த உரிமைத்தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும் குறித்து சாத்தான்குளம் ஒன்றிய பாஜக பொதுச்செயலர் ஜெ. ஜெயராஜேஷ் (எ) ராஜேஷ் (50). சமுக வலைதளமான டிவிட்டரில் ஒன்றிய பாஜக பெயரில் உள்ள குழு மூலம் இத் திட்டம் குறித்தும் அவதூறாக தவறான பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
இதற்கு அதில் பதிவில் பலர் தவறான பதிவு என குறிப்பிட்டுள்ளனர். ஆனால் அதற்கு ராஜேஷ், அவதூறாகவும் பெண்மை குறித்தும் இழிவாக பதிவிட்டிருந்தாக தெரிகிறது. . இதுகுறித்து சைபர் கிரைம் பிராஞ்ச் போலீசாருக்கு கண்டறிந்து நடவடிக்கை எடுகக்க வலியுறுத்தியுள்ளழர். மேலும் . இதனையறிந்த சாத்தான்குளம் மாவட்ட திமுக பிரதிநிதி லெ. சரவணன் (50) சாத்தான்குளம் காவல் நிலையத்திலும் புகார் செய்தார்.
அதன்பேரில் சாத்தான்குளம் உதவி ஆய்வாளர் ஜாண்சன், ராஜேஷ் மீது 3பிரிவுகளில் வழக்குபதிவு செய்தார். காவல் ஆய்வாளர் முத்து, டிஎஸ்பி அருள் ஆகியோர் விசாரணை நடத்தி, ராஜேஷை கைது செய்தனர். இதனையறிந்த மாவட்ட பாஜக தலைவர் ஆர். சித்ராங்கதன், மாவட்ட துணைத் தலைவர் எஸ். செல்வராஜ், நகர தலைவர் ஜோசப், மாநில பாஜக இளைஞரணி செயலர் பூபதிபாண்டியன், உள்ளிட்ட பாஜகவினர் பலர் வந்து எதிர்ப்பு தெரிவித்து போலீசிடம் வாக்கு வாதம் செய்தனர்.
அப்போது மாவட்டத் தலைவர் சித்ராங்கதன், பாரத பிரதமர் நரேந்திரமோடி குறித்து சமூக வலை தளத்தில் அவதூறாக விமர்சனம் செய்தாக கடந்த 6 மாதத்துக்கு முன்பு தட்டார்மடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அப்புகாருக்கு இதுவரை போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையென கூறினார். இதற்கிடையே கைது செய்யப்பட்ட ராஜேஷ்க்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை பெற்று நெல்லை மருத்துவ கல்லூரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை அனுப்பப்பட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

லஞ்சம் வாங்கிய இளநிலை பொறியாளருக்கு 4 ஆண்டுகள் சிறை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
திங்கள் 12, மே 2025 5:33:36 PM (IST)

தமிழகத்தில் மே 14, 15ல் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்
திங்கள் 12, மே 2025 4:57:09 PM (IST)

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் கே.எஸ். தங்கபாண்டியன் மறைவு: அமைச்சர் அஞ்சலி!
திங்கள் 12, மே 2025 3:31:32 PM (IST)

பிள்ளைமார், முதலியார் சமுதாயத்திற்கு 15 சதவீதம் இட ஒதுக்கீடு : மாநில தலைவர் வலியுறுத்தல்
திங்கள் 12, மே 2025 12:50:38 PM (IST)

கள்ளழகர் திருவிழாவில் புனிதமான பாரம்பரியத்தை கொண்டாடுகிறோம் : ஆளுநர் ரவி வாழ்த்து!
திங்கள் 12, மே 2025 12:34:52 PM (IST)

பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
திங்கள் 12, மே 2025 10:27:28 AM (IST)
