» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஈவிகேஎஸ் இளங்கோவன் குணமடைந்தார் - மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை

புதன் 22, மார்ச் 2023 3:59:35 PM (IST)



கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் குணமடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த 15 ஆம் தேதி நெஞ்சு வலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான கரோனா தொற்றுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.

கரோனா பாதிப்புடன் நுரையீரல் பாதிப்பும் கண்டறியப்பட்டதால் ,செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு செயற்கை ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது என தகவல் வெளியானது .இந்த நிலையில் தற்போதைய மருத்துவ பரிசோதனையில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கோவிட் நெகட்டிவ் என வந்ததாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஈவிகேஎஸ் இளங்கோவன் குணமடைந்ததாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory