» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மேல்மருவத்தூரில் நவராத்திரி விழா: ஆன்மிக குரு பங்காரு அடிகளார் தொடங்கி வைத்தார்!

திங்கள் 26, செப்டம்பர் 2022 12:02:58 PM (IST)



மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நவராத்திரி விழாவினை ஆன்மிக குரு பங்காரு அடிகளார் அகண்ட தீபம் ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார்.

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் செப்டம்பர் தேதி 25 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி அளவில் அகண்ட தீபத்தை ஏற்றி வைத்து நவராத்திரி விழாவினை துவக்கி வைத்தார். முன்னதாக சித்தர் பீடத்திற்கு வந்த ஆன்மிக குரு பங்காரு அடிகளாருக்கு மேளதாளம் முழங்க சென்னை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் வரவேற்பு அளித்து பாத பூஜை செய்தனர். சித்தர் பீடத்தின் வளாகம் முழுவதும் கலை நயத்துடன் பூக்களாலும் மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. 

அதிகாலை 2 மணி அளவில் மங்கல இசையுடன் தொடங்கிய நவராத்திரி விழாவில் கருவறையில் உள்ள ஆதிபராசக்தி அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை செய்து தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. காலை 9.30 மணி அளவில் அடிகளார் அவர்கள் கருவறைக்கு சென்று அம்மனுக்கு தீபாராதனை செய்து கருவறையில் சுயம்பு அம்மனுக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த அகண்ட தீபத்தை உலக நன்மைக்காகவும், இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டியும் ஏற்றி வைத்தார். பின்னர் அந்த அகண்ட தீபத்தை சிறுமிகளிடம் கையில் கொடுத்து சித்தர் பீடத்தை வலம் வரும்படி கூறினார். 

அகண்ட தீபத்திற்கு பல்வேறு வகையில் திருஷ்டிகள் கழிக்கப்பட்டன.  இதனைத் தொடர்ந்து அனைத்து சன்னதிகளையும் வலம் வந்த அகண்ட தீபம் 10 மணியளவில் கருவறையினுள் தென்கிழக்கு திசையில் அக்னி மூலையில் அமைக்கப்பட்டு இருந்த தனி பீடத்தில் வைக்கப்பட்டு ஆன்மிக குரு பங்காரு அடிகளார் ஆன்மீக இயக்கத் தலைவர் இலட்சுமி பங்காரு அடிகளார் ஆகியோர் அகண்ட தீபத்தில் முக்கூட்டு எண்ணெய் ஊற்றி தீபாராதனை செய்தனர். 

இதனைத் தொடர்ந்து செவ்வாடை பக்தர்கள் கருவறையில் அமைக்கப்பட்டிருந்த அகண்ட தீபத்தில் முக்கூட்டு எண்ணெய் ஊற்றி ஆதிபராசக்தி அம்மனை வழிபட அனுமதிக்கப்பட்டனர். மேலும் புரட்டாசி மாத அமாவாசையை ஒட்டி காலை 11.20 மணிக்கு அமாவாசை வேள்வி பூஜையை ஆன்மிக குரு பங்காரு அடிகளார் துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நவராத்திரி விழா அக்டோபர் 5 தேதி வரை ஆதிபராசக்தி அம்மனுக்கு தினம்தோறும் பல்வேறு காப்பு மற்றும் அலங்காரத்துடன் நவராத்திரி விழா நடைபெறும். 



விழா ஏற்பாட்டினை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் தலைவர் இலட்சுமி பங்காரு அடிகளார், துணைத் தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ் தலைமையில் அனைத்து மாவட்ட ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தினர் பொறுப்பேற்று செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் அறங்காவலர் உமாதேவி ஜெய் கணேஷ் , ஆஷா அன்பழகன், ஸ்ரீலேகா செந்தில்குமார், வழக்கறிஞர் அகத்தியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory