» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கிராம கோயில் விழாக்களுக்கு போலீஸ் அனுமதி தேவையில்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு

செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 3:37:27 PM (IST)

கிராமங்களில் கோயில் திருவிழா நடத்த போலீசாரிடம் அனுமதி பெறவேண்டிய அவசியமில்லை என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை  உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் வலையப்பட்டியைச் சேர்ந்த சீனி என்பவர், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ''வலையப்பட்டி கிராமத்தில் உள்ள பட்டு அரசி அம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா நடைபெறும். இந்த திருவிழா எவ்வித பிரச்சினையும் இல்லாமல் சுமூகமாக நடைபெறும். 

இந்தாண்டு பொங்கல் திருவிழாவை ஆக.19 முதல் 20 வரை நடத்த முடிவு செய்துள்ளோம். திருவிழாவுக்கு அனுமதி கோரி போலீஸாரிடம் மனு அளித்தோம்.  இதுவரை அனுமதி தரவில்லை. திருவிழாவுக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்'' என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. 

இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் "கிராமங்களில் கோயில் திருவிழா நடத்த போலீஸாரிடம் அனுமதி பெற வேண்டியதில்லை. பட்டு அரசி கோயில் திருவிழாவுக்கு கிராம மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். இதனால், சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பில்லை. இதனால் திருவிழா நடத்க அனுமதி வழங்க வேண்டும்" என்று உத்தரவிட்டார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory