» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

துனை நிலையத்தில் ரூ.1.68 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகள்: முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்

செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 11:58:22 AM (IST)



நடுவக்குறிச்சி துனை மின்நிலையத்தில் ரூ.1.68 கோடி மதிப்பீட்டில் நிறைவடைந்த திட்டங்களை காணொளி மூலம் முதல்வர் ஸ்டாலின்  துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் ரூ.161.38 கோடியில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 16 புதிய துணை மின் நிலையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளிக் காட்சி வாயிலாக துவக்கி வைத்தார். இதன்படி தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே நடுவக்குறிச்சி துனைமின் நிலையத்தில் ரூ.1 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் நிறைவடைந்த   புதிய மின்மாற்றி, பவர் டிரான்ஸ்பார்மர், மற்றும் கட்டுப்பாட்டு அறையை முதல்வர்  ஸ்டாலின் துவக்கி வைத்தார்..

இதையொட்டி நடுவக்குறிச்சி துணை மின்நிலையத்தில் நடைபெற்ற விழாவில் துணை மின் பொறியாளர் ராஜேஷ், தெற்கு திமுக ஒன்றிய செயலாளர் பாலமுருகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தகுமார், அரசூர் ஊராட்சி தலைவர் தினேஷ் ராஜசிங், திமுக ஒன்றிய பொருளாளர் ஆனந்த், தாமரைமொழி ஊராட்சி மன்ற தலைவர் சாந்தா, திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் இந்திரகாசி, மின்வாரிய ஊழியர்கள் மற்றும், பொதுமக்கள்  கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory