» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருச்சி சிறப்பு முகாமிலிருந்து 16பேர் விடுவிப்பு: தமிழ்நாடு அரசுக்கு சீமான் நன்றி
திங்கள் 4, ஜூலை 2022 12:12:45 PM (IST)
திருச்சி சிறப்பு முகாமிலிருந்து ஈழத் தமிழர்கள் 16 பேர் விடுவிக்கப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் "திருச்சி, சிறப்பு முகாமிலிருந்து ஈழச்சொந்தங்கள் 16 பேர் விடுவிக்கப்பட்ட செய்தியறிந்து மகிழ்ந்தேன். நீண்டநெடுநாட்களாக நடந்தேறிய ஈழச்சொந்தங்களின் பட்டினிப் போராட்டத்திற்கும், கருத்துப் பரப்புரைக்கும் பிறகு, ஆறுதலாகக் கிடைக்கப் பெற்றிருக்கிற விடுதலை அறிவிப்பைப் பெரிதும் வரவேற்கிறேன். இம்முன்னெடுப்பைச் செய்த தமிழக அரசுக்கு எனது உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
இதேபோல, இந்தியச்சட்டத்தின்படி தங்களை ஏதிலிகளெனப் பதிவுசெய்திருக்கும் ஏனைய ஈழச்சொந்தங்களையும் மற்ற சிறப்பு முகாம்களிலிருந்து விடுவிக்க வேண்டுமெனவும், காவல்துறையின் கியூ பிரிவினை விரைந்து கலைக்க வேண்டுமெனவும் தமிழக முதல்வருக்குக் கோரிக்கை விடுக்கிறேன்!" இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
COMEDY RASIGANJul 4, 2022 - 04:33:15 PM | Posted IP 162.1*****