» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குரங்கு அம்மை நோய் குறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
வியாழன் 26, மே 2022 3:39:51 PM (IST)
குரங்கு அம்மை நோய் குறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது: மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் இதுவரை சுமார் 7.01 லட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளனர். கரோனா முதல் தவனை தடுப்பூசியை 93.76 சதவீதம் பேரும், இரண்டாம் தவனை தடுப்பூசியை 82.48 சதவீதம் செலுத்தி உள்ளனர்.ஜூன் 12 ஆம் தேதி ஒரு லட்சம் இடஙகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் இதுவரை யாருக்கும் கண்டறியப்படவில்லை. இங்கிலாந்தில் இருந்து வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் இருந்ததில், சோதனை முடிவுகள் நெகட்டிவ் ஆகவே வந்துள்ளது. குரங்கு அம்மை நோய் குறித்து அச்சம் தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தைப்பூச இருமுடி விழா: மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் 57 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்கும்!
ஞாயிறு 16, நவம்பர் 2025 1:28:56 PM (IST)

கனமழை எச்சரிக்கை: நெல்லை-தூத்துக்குடி உள்பட 10 மாவட்டங்களுக்கு விரைந்த பேரிடர் மீட்பு படை
ஞாயிறு 16, நவம்பர் 2025 11:41:16 AM (IST)

நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் : பெண் சிக்கினார்
ஞாயிறு 16, நவம்பர் 2025 11:39:41 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு: 2,632 பேர் எழுதினர்; 404 பேர் வரவில்லை!
ஞாயிறு 16, நவம்பர் 2025 11:32:55 AM (IST)

நெல்லையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் ருசிகரம் : தந்தையும் மகனும் தேர்வெழுதினர்!!
ஞாயிறு 16, நவம்பர் 2025 11:13:11 AM (IST)

மாநில வில் வித்தை போட்டி: வீரவநல்லூர் மாணவனுக்கு தங்கப்பதக்கம் வென்று அசத்தல்
ஞாயிறு 16, நவம்பர் 2025 11:09:21 AM (IST)


.gif)