» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஜி-ஸ்கொயர் வழக்கில் விகடன் பத்திரிகையின் இயக்குநர் உள்ளிட்ட சிலரின் பெயர்கள் நீக்கம்!
வியாழன் 26, மே 2022 3:35:13 PM (IST)
ஜி-ஸ்கொயர் வழக்கில், ஆதாரம் இல்லாததால் விகடன் பத்திரிகையின் இயக்குநர் உள்ளிட்ட சிலரின் பெயர்களை முதல் தகவல் அறிக்கையிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சென்னை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

இதற்கு பத்திரிகையாளர்கள் மற்றும் அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்களும் கடும் எதிர்ப்பையும், கண்டனங்களையும் தெரிவித்தனர். இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜி-ஸ்கொயர் நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், ஆதாரம் இல்லாததால் விகடன் பத்திரிகையின் இயக்குநர் உள்ளிட்ட சிலரின் பெயர்களை முதல் தகவல் அறிக்கையிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வழக்கின் முதல் கட்ட விசாரணையில் கெவின், 50 லட்சம் ரூபாய் கேட்டு பிளாக் மெயில் செய்தது புலனாயிற்று என்றும் கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் சென்னை மாநகர காவல் ஆணையர் கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மருத்துவக் கழிவுகளை கொட்டினால் குண்டர் சட்டம்: சட்டத்திருத்தம் அமலுக்கு வந்தது
புதன் 16, ஜூலை 2025 5:28:18 PM (IST)

கருணாநிதி சிலை மீது கருப்பு பெயிண்ட் ஊற்றப்பட்ட விவகாரம்: 77 வயது மருத்துவர் கைது
புதன் 16, ஜூலை 2025 5:05:17 PM (IST)

விடுதி உணவை சாப்பிட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் : மருத்துவமனையில் அனுமதி!
புதன் 16, ஜூலை 2025 4:38:32 PM (IST)

ஆயுத பூஜை, விஜயதசமி : இரயில் டிக்கெட் முன்பதிவு 60 நாட்களுக்கு முன்பாக துவக்கம்!
புதன் 16, ஜூலை 2025 3:54:25 PM (IST)

புதிய பயணம் தொடக்கம் : நண்பர் ரஜினியிடம் வாழ்த்து பெற்ற கமல்ஹாசன்..!
புதன் 16, ஜூலை 2025 12:30:22 PM (IST)

மதுரையில் தவெக 2-வது மாநில மாநாடு பந்தல்கால் நடும் விழா: தொண்டர்கள் குவிந்தனர்!
புதன் 16, ஜூலை 2025 11:55:08 AM (IST)
