» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஜி-ஸ்கொயர் வழக்கில் விகடன் பத்திரிகையின் இயக்குநர் உள்ளிட்ட சிலரின் பெயர்கள் நீக்கம்!
வியாழன் 26, மே 2022 3:35:13 PM (IST)
ஜி-ஸ்கொயர் வழக்கில், ஆதாரம் இல்லாததால் விகடன் பத்திரிகையின் இயக்குநர் உள்ளிட்ட சிலரின் பெயர்களை முதல் தகவல் அறிக்கையிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சென்னை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

இதற்கு பத்திரிகையாளர்கள் மற்றும் அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்களும் கடும் எதிர்ப்பையும், கண்டனங்களையும் தெரிவித்தனர். இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜி-ஸ்கொயர் நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், ஆதாரம் இல்லாததால் விகடன் பத்திரிகையின் இயக்குநர் உள்ளிட்ட சிலரின் பெயர்களை முதல் தகவல் அறிக்கையிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வழக்கின் முதல் கட்ட விசாரணையில் கெவின், 50 லட்சம் ரூபாய் கேட்டு பிளாக் மெயில் செய்தது புலனாயிற்று என்றும் கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் சென்னை மாநகர காவல் ஆணையர் கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி : நெல்லை சரக டிஐஜி முதலிடம்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 8:10:00 PM (IST)

சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:10:26 PM (IST)

முத்தூர் ஊராட்சியில் புதிய தொழில் பேட்டை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:25:13 PM (IST)

சென்னையில் விடிய, விடிய கொட்டித் தீர்த்த கனமழை: விமானங்கள் தாமதம்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 12:40:09 PM (IST)

தன்மானம்தான் முக்கியம் என்றால் டெல்லி சென்றது ஏன்? இபிஎஸ்-க்கு டிடிவி தினகரன் கேள்வி!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 12:12:21 PM (IST)

ம.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா தலைமையில் புதிய கட்சி உதயம்: கொடி அறிமுகம்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 11:17:34 AM (IST)
