» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை ஜூன் 13ந் தேதி பள்ளிகள் திறப்பு: அரசு அறிவிப்பு
வியாழன் 26, மே 2022 7:39:57 AM (IST)
தமிழகத்தில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை ஜூன் 13ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறித்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை சார்பாக மாணவர்களுக்கு இணைய வழி சேவைகள் மற்றும் 2022-23-ம் கல்வி ஆண்டு நாட்காட்டி, ஆசிரியர் திறன் மேம்பாட்டு திட்ட நாட்காட்டி வெளியிடும் நிகழ்ச்சி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்துள்ளதாவது: தமிழகத்தில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை ஜூன் 13ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்கள் அதற்கான தமிழ்வழி சான்றிதழை பள்ளிக்கு சென்று வாங்கி வந்தனர். இனி சான்றிதழ்கள் ஆன்லைன் வழியாக வழங்கப்படும். அதேபோல் இணை படிப்புகளுக்கான சான்றிதழ், மைக்ரேன் சான்றிதழ் உள்ளிட்ட 25 வகையான சான்றிதழ்கள் இனி ஆன்லைன் வழியாக இ-சேவை மையங்களில் பெற்றுக் கொள்ளலாம். இது எளிதான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
இதேபோல் பள்ளிகளில் ஆசிரியர்கள் 100-க்கும் மேலான பதிவேடு பராமரித்து வருகிறார்கள். இதனால் கால விரயம் ஏற்படுகிறது. மேலும் வேலை பளுவும் அதிகரிக்கிறது. இதனை எளிதாக்கும் வகையில் 38 வகையான பதிவேடுகள் இணைய வழியில் பராமரிக்க வசதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும் ஆசிரியர்கள் விடுப்புகள் தொடர்பாக விண்ணப்பிப்பதற்கும், படிப்பதற்கு வெளிநாடு செல்ல அனுமதி பெறுவதற்கும் கல்வி அலுவலகங்களை நாட வேண்டி இருந்தது. அவை எளிதாக்கப்பட்டு இருக்கும் இடத்திலேயே விண்ணப்பித்து