» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு: 36 பேர் காயம் -21 காளைகளை அடக்கியவருக்கு முதல் பரிசு!

சனி 15, ஜனவரி 2022 7:56:09 PM (IST)



மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது. 2  காவலர்கள் உள்பட 36 பேர் காயமடைந்தனர். 

பாலமேட்டில் இன்று (சனிக்கிழமை) காலை தொடங்கி நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 700 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். 7 சுற்றுகள் முடிவில் 21 காளைகளை அடக்கிய பிரபாகரன் முதலிடம் பிடித்து பைக்கை பரிசாகப் பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக 11 காளைகளை அடக்கி கார்த்திக் ராஜா இடம் பிடித்தார். அவருக்கு டிவி பரிசாக வழங்கப்பட்டது.

சிறந்த காளைக்கான முதல் பரிசாக சிவகங்கை மாவட்டம் புலியூரைச் சேர்ந்த மாட்டின் உரிமையாளருக்கு கார் வழங்கப்பட்டது. 2-வது பரிசு நாட்டு மாடு காளையின் உரிமையாளர் பிரகாஷுக்கு வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டில் இரண்டு காவலர்கள் உள்பட 36 பேர் காயமடைந்தனர். ஜல்லிக்கட்டில் பிரபாகரன் முதலிடம் பிடிப்பது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory