» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்

சனி 15, ஜனவரி 2022 9:33:20 AM (IST)

கடலோர மாவட்டங்களில் வரும் 17 மற்றும் 18ம் தேதிகளில், மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலோர மாவட்டங்கள், மற்ற மாவட்டங்கள், புதுச்சேரியில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் வரும் 17 மற்றும் 18ம் தேதிகளில், மிதமான மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும்.

சென்னையில் வானம் மேகமூட்டமாக காணப்படும். சில பகுதிகளில் லேசான மழை பெய்யும். அதிகபட்சம், 32 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும்.சென்னையில் நேற்று காலையில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. எம்.ஆர்.சி.,நகரில், 1 செ.மீ., மழை பதிவானது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory