» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இராமநாதபுரத்தில் போலீசார் தாக்கியதால் கல்லூரி மாணவர் மரணம்? காவல் துறை விளக்கம்
திங்கள் 6, டிசம்பர் 2021 4:41:17 PM (IST)
இராமநாதபுரத்தில் போலீசார் தாக்கியதால் மரணம் அடைந்ததாகக் கூறப்படும் மணிகண்டனின் மரணத்திற்கு நீதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

வாகன சோதனையின் போது நிற்காமல் சென்ற மணிகண்டனை, போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று தாக்கியதில் இறந்ததாக கூறி தொடர்ந்து போராட்டம் நடத்தினர். அவர்களுடன், ராமநாதபுரம் குற்றப்பிரிவு ஏடிஎஸ்பி திருமலை, டிஎஸ்பி ஜான் பிரிட்டோர் ஆகியோர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களது சமரசத்துக்குப் பிறகு போராட்டம் கைவிடப்பட்டது. மணிகண்டன் உறவினர்கள், ‘‘எஸ்.பி நேரடியாக விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
போலீஸ் தரப்பில் கூறும்போது, ‘‘கீழத்தூவல் காவல் நிலையத்தில் விசாரணைக்காக மணிகண்டன் வந்து, செல்லும் கேமரா பதிவுகள் உள்ளன. பிரேத பரிசோதனை அறிக்கை வந்ததும் இறப்பு குறித்து முழுமையான முடிவுகள் தெரிய வரும்’’ என்றனர். இந்நிலையில் காவல் துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் மணிகண்டனின் மரணத்திற்கு நீதி கேட்டு #JusticeForManikandan என்ற ஹேஸ்டேக் டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. இதேபோல் பேஸ்புக்கிலும் மனிகண்டனின் மரணத்திற்கு நீதி கேட்டு #JusticeForManikandan என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
மக்கள் கருத்து
உலகம் அப்படிதான்Dec 7, 2021 - 08:24:05 AM | Posted IP 162.1*****
குற்றவாளி காவலராக இருந்தாலும் இடமாற்றம், பணிநீக்கம் தான் வரும். ஆனால் காவல்துறையினருக்கு தண்டனை கிடைக்கவே கிடைக்காது உண்மையே..
மேலும் தொடரும் செய்திகள்

மின்மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் ஆய்வு: நுகர்வோரிடம் குறைகளை கேட்டறிந்தார்!
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 5:34:04 PM (IST)

கிராம கோயில் விழாக்களுக்கு போலீஸ் அனுமதி தேவையில்லை: உயர் நீதிமன்றம் உத்தரவு
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 3:37:27 PM (IST)

தூத்துக்குடியில் புதிய துணை மின் நிலையம் துவக்க விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு!
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 3:29:21 PM (IST)

தேசியக் கொடியில் சர்ச்சைக்குரிய வாசகம் : தனியார் பள்ளி ஆசிரியர் கைது!
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 12:37:22 PM (IST)

துனை நிலையத்தில் ரூ.1.68 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகள்: முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 11:58:22 AM (IST)

தனியாா் வங்கி கொள்ளை வழக்கில் 5பேர் கைது: 18 கிலோ தங்க நகைகள் பறிமுதல்
செவ்வாய் 16, ஆகஸ்ட் 2022 11:13:12 AM (IST)

உலகம் அப்படிதான்Dec 7, 2021 - 08:24:09 AM | Posted IP 162.1*****