» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இராமநாதபுரத்தில் போலீசார் தாக்கியதால் கல்லூரி மாணவர் மரணம்? காவல் துறை விளக்கம்
திங்கள் 6, டிசம்பர் 2021 4:41:17 PM (IST)
இராமநாதபுரத்தில் போலீசார் தாக்கியதால் மரணம் அடைந்ததாகக் கூறப்படும் மணிகண்டனின் மரணத்திற்கு நீதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே நீர்கோழியேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (21). கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து பரிசோதனை செய்ததில் மணிகண்டன் இறந்து விட்டதாக கூறினர். நேற்று காலை முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு மணிகண்டன் உடலை மருத்துவ பரிசோதனைக்காக கொண்டு வந்தனர். அப்போது உறவினர்கள் சாலையில் அமர்ந்து திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வாகன சோதனையின் போது நிற்காமல் சென்ற மணிகண்டனை, போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று தாக்கியதில் இறந்ததாக கூறி தொடர்ந்து போராட்டம் நடத்தினர். அவர்களுடன், ராமநாதபுரம் குற்றப்பிரிவு ஏடிஎஸ்பி திருமலை, டிஎஸ்பி ஜான் பிரிட்டோர் ஆகியோர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களது சமரசத்துக்குப் பிறகு போராட்டம் கைவிடப்பட்டது. மணிகண்டன் உறவினர்கள், ‘‘எஸ்.பி நேரடியாக விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
போலீஸ் தரப்பில் கூறும்போது, ‘‘கீழத்தூவல் காவல் நிலையத்தில் விசாரணைக்காக மணிகண்டன் வந்து, செல்லும் கேமரா பதிவுகள் உள்ளன. பிரேத பரிசோதனை அறிக்கை வந்ததும் இறப்பு குறித்து முழுமையான முடிவுகள் தெரிய வரும்’’ என்றனர். இந்நிலையில் காவல் துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் மணிகண்டனின் மரணத்திற்கு நீதி கேட்டு #JusticeForManikandan என்ற ஹேஸ்டேக் டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. இதேபோல் பேஸ்புக்கிலும் மனிகண்டனின் மரணத்திற்கு நீதி கேட்டு #JusticeForManikandan என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
மக்கள் கருத்து
உலகம் அப்படிதான்Dec 7, 2021 - 08:24:05 AM | Posted IP 162.1*****
குற்றவாளி காவலராக இருந்தாலும் இடமாற்றம், பணிநீக்கம் தான் வரும். ஆனால் காவல்துறையினருக்கு தண்டனை கிடைக்கவே கிடைக்காது உண்மையே..
மேலும் தொடரும் செய்திகள்

நாங்குநேரி அ.ம.மு.க. வேட்பாளர் ஆர். இசக்கிமுத்து: எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து!
ஞாயிறு 29, மார்ச் 2026 10:30:36 AM (IST)

பாபநாசம் வனப்பகுதியில் பெண் சிறுத்தை மர்ம சாவு : வனத்துறையினர் விசாரணை!
ஞாயிறு 29, மார்ச் 2026 9:58:59 AM (IST)

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஒரே நாளில் 3 பேருக்குச் சிறை - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
ஞாயிறு 29, மார்ச் 2026 8:15:09 AM (IST)

வேட்பு மனு தாக்கலின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் : ஆட்சியர் அறிவிப்பு
சனி 28, மார்ச் 2026 5:55:12 PM (IST)

ஓ.பன்னீர்செல்வத்துக்கு போடி: வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியனுக்கும் தொகுதிகள் ஒதுக்கீடு!
சனி 28, மார்ச் 2026 5:27:45 PM (IST)

தூத்துக்குடியில் கீதா ஜீவன், திருச்செந்தூரில் அனிதா ராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டி: திமுக வேட்பாளர் பட்டியல்!
சனி 28, மார்ச் 2026 4:23:58 PM (IST)


உலகம் அப்படிதான்Dec 7, 2021 - 08:24:09 AM | Posted IP 162.1*****