» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் முறைக்கேடாக நகைக் கடன்: பணத்தை வசூலிக்க உத்தரவு
புதன் 22, செப்டம்பர் 2021 11:20:01 AM (IST)
சென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் முறைக்கேடாக நகைக் கடன் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
கடன் தள்ளுபடிக்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர், வெவ்வேறு கூட்டுறவு வங்கிகளில் நகைகளை அடகு வைத்திருப்பது தெரியவந்துள்ளதை அடுத்து, முறைகேடாக நகைக்கடன் பெற்றவர்களிடம் இருந்து பணத்தை திருப்பி வசூலிக்க அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், குடும்ப அட்டையில் பெயர் உள்ளவர்கள் பலர், கடன் தள்ளுபடிக்காக, ஒன்றுக்கு மேற்பட்ட கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. எனவே, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் நகைக்கடன் பெற்றிருந்தாலும் 5 சவரனுக்கு மேலான கடனுக்கான தொகையை வசூல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. நகைக்கடன் தவணை தவறி இருப்பின் உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகளை பின்பற்றி தொகையை வசூல் செய்யுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குரூப் 2 முதன்மை தேர்வுக்கு 9 மணிக்கு மேல் வந்தால் அனுமதி கிடையாது: ஆட்சியர் அறிவிப்பு
வெள்ளி 13, மார்ச் 2026 12:53:27 PM (IST)

சிறுமி படுகொலை: குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர் - கனிமொழி எம்.பி. உறுதி!
வெள்ளி 13, மார்ச் 2026 12:40:01 PM (IST)

எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்!
வெள்ளி 13, மார்ச் 2026 12:13:57 PM (IST)

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை: வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை!
வெள்ளி 13, மார்ச் 2026 12:10:01 PM (IST)

கழிவுமீன் நிறுவனங்களை மூடக்கோரி 668-வது நாளாக பொட்டலூரணி மக்கள் போராட்டம்!
வெள்ளி 13, மார்ச் 2026 10:28:37 AM (IST)

வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகை கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை!
வெள்ளி 13, மார்ச் 2026 8:40:03 AM (IST)

