» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் முறைக்கேடாக நகைக் கடன்: பணத்தை வசூலிக்க உத்தரவு
புதன் 22, செப்டம்பர் 2021 11:20:01 AM (IST)
சென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் முறைக்கேடாக நகைக் கடன் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
கடன் தள்ளுபடிக்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர், வெவ்வேறு கூட்டுறவு வங்கிகளில் நகைகளை அடகு வைத்திருப்பது தெரியவந்துள்ளதை அடுத்து, முறைகேடாக நகைக்கடன் பெற்றவர்களிடம் இருந்து பணத்தை திருப்பி வசூலிக்க அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், குடும்ப அட்டையில் பெயர் உள்ளவர்கள் பலர், கடன் தள்ளுபடிக்காக, ஒன்றுக்கு மேற்பட்ட கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. எனவே, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் நகைக்கடன் பெற்றிருந்தாலும் 5 சவரனுக்கு மேலான கடனுக்கான தொகையை வசூல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. நகைக்கடன் தவணை தவறி இருப்பின் உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகளை பின்பற்றி தொகையை வசூல் செய்யுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெருமாநிலங்களை பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு சாதனை : முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
சனி 13, டிசம்பர் 2025 12:53:04 PM (IST)

பள்ளி வகுப்பறையில் மது அருந்திய விவகாரம்: நெல்லையில் 6 மாணவிகள் சஸ்பெண்ட்...!
சனி 13, டிசம்பர் 2025 12:09:48 PM (IST)

ஓபிஎஸ் தலைமையில் டிச.15ல் நடைபெறவிருந்த ஆலோசனை கூட்டம் ஒத்திவைப்பு
சனி 13, டிசம்பர் 2025 11:52:30 AM (IST)

கரூர் சம்பவத்தில் த.வெ.க. தலைவர் விஜய்யிடம் விசாரணை: சி.பி.ஐ. திட்டம்!
சனி 13, டிசம்பர் 2025 11:43:21 AM (IST)

சினிமா தயாரிப்பாளரை மிரட்டியதாக வழக்கு: பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கைது!
சனி 13, டிசம்பர் 2025 11:36:24 AM (IST)

தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சம்: சவரன் ரூ.1 லட்சமாக உயர வாய்ப்பு!!
சனி 13, டிசம்பர் 2025 11:22:35 AM (IST)


.gif)