» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காயங்குளம் - நெல்லை இடையே பாலருவி எக்ஸ்பிரஸ் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

புதன் 22, செப்டம்பர் 2021 10:58:19 AM (IST)

பாலம் பராமரிப்பு பணி காரணமாக காயங்குளம் - திருநெல்வேலி இடையே பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் மண்டல தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: கொல்லம் மாவட்டம், சாஸ்தாம்கோட்டை - பெரிநாடு இடையே ரயில் பாலம் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால், ரயில் போக்குவரத்தில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. 

இதன்படி, 28-ந் தேதி புறப்படும் பாலக்காடு - திருநெல்வேலி பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் (எண். 06792) காயங்குளம் - திருநெல்வேலி இடையே ரத்து செய்யப்படுகிறது. அதுபோல், 25-ந் தேதி புறப்படும் சென்னை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் (எண். 06127), கொல்லம் - குருவாயூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory