» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறப்பு உறுதி: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
சனி 21, ஆகஸ்ட் 2021 3:34:02 PM (IST)
தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகளை திறப்பதில் அரசு உறுதியாக உள்ளது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி அளித்துள்ளார். அவர் பேசும்போது, வரும் செப்டம்பர் 1ம் தேதி 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பதில் அரசு உறுதியாக உள்ளது. வகுப்புகளை பாதுகாப்பாக நடத்துவதற்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி இருக்கிறோம். மேலும், மதுரையை தொடர்ந்து திருச்சியிலும் கலைஞர் நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதன்படி, வகுப்பில் மாணவர்கள் சமூக இடைவெளி விட்டு உட்காருவது, முகக்கவசம் அணிவது, 50 சதவீத மாணவர்கள் மட்டுமே சுழற்சி முறையில் பள்ளிக்கு வருவது, அவர்களுக்கு தேவையான கிருமி நாசினிகள் வழங்கப்படுவது, பள்ளிகள் தயார் நிலையில் இருப்பது, ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசிகள் வழங்கப்படுவது என்பன உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மோசடி ஆவணப் பதிவுகளை தடுக்க நடவடிக்கை: பத்திரம் நகல் எழுதுவோர் சங்கம் கோரிக்கை
புதன் 15, அக்டோபர் 2025 10:38:37 AM (IST)

நாலுமாவடியில் ரூ.30 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை: மோகன் சி.லாசரஸ் திறந்து வைத்தார்
புதன் 15, அக்டோபர் 2025 10:10:54 AM (IST)

பாளை. மத்திய சிறையில் கைதி தூக்குப்போட்டு தற்கொலை: போக்சோ வழக்கில் கைதானவர்
புதன் 15, அக்டோபர் 2025 8:46:52 AM (IST)

திருச்செந்தூர் கோவில் அறங்காவலர் குழுவை நியமிக்க நடவடிக்கை: உயர்நீதிமன்றம் கெடு
புதன் 15, அக்டோபர் 2025 8:43:17 AM (IST)

தூத்துக்குடியில் ரூ.750 கோடியில் காற்றாலை முனையம் : வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் தகவல்!
புதன் 15, அக்டோபர் 2025 8:34:13 AM (IST)

திருச்செந்தூர் முருகன் கோவில் கந்தசஷ்டி விழாவிற்கு சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை!
செவ்வாய் 14, அக்டோபர் 2025 9:36:55 PM (IST)
