» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அரசு கேபிள் டிவி நிறுவன சிக்னலை துண்டித்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார்!
திங்கள் 2, ஆகஸ்ட் 2021 4:05:22 PM (IST)
திருநெல்வேலியில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அரசு கேபிள் டிவி நிறுவன சிக்னலை துண்டித்தவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என தனி வட்டாட்சியர் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக திருநெல்வேலி அரசு கேபிள் டிவி நிறுவனம், துணை மேலாளர் / தனி வட்டாட்சியர் ஆதிநாராயணன் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனு: திருநெல்வேலி மற்றும் ஒருங்கிணைந்த தென்காசி மாவட்டம் - தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சிக்னல் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் துணை கட்டுப்பாட்டு அறையான பாவூர்சத்திரம் கட்டுப்பாட்டு அறையிலிருந்து சிவகாமிபுரம், மருதடியூர், மேட்டூர், பெத்தநாடார்பட்டி ஆகிய பகுதிகளுக்கு தமிழ்நாடு அரசு சிக்னல் சென்று வருகிறது.
இதனை கடந்த 22.07-2021 அன்று தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சிக்னல் செல்லும் OFC வயரில் உள்ள Coreகளை (கண்ணாடி இழை) சுமார் பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் துண்டிப்பு செய்யப்பட்டுள்ளது. பாவூர்சத்திரம் BSNL அலுவலகம் அருகே மற்றும் அதற்கு பின்புறம் உள்ள பகுதியிலும் துண்டிப்பு செய்துள்ளனர். இதனால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் குறும்பலாபேரி பகுதி உள்ளூர் கேபிள் டிவி ஆப்பரேட்டர் லோகநாதபாண்டியன் என்பவர் வென்னிமலை முருகன் கோவிலுக்கு கீழ்புறம் ஆர்ச் பக்கத்தில் உள்ள கேபிள் வயர்களை துண்டிப்பு செய்துள்ளதாக சில நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தங்களிடம் புகார் மனு அளித்துள்ளர். இதனால் துண்டிப்பு செய்த நபர்கள் மீது இதற்குண்டான இழப்பீடும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டுகொள்கிறேன் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பொய்களைப் பேசி வருகிறார்: முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:51:55 PM (IST)

கேஸ் சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டம்: 7 பவுன் நகை, ரூ.2 லட்சம் பணம் தீயில் கருகின!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:33:16 AM (IST)

நெல்லை, ராமேசுவரம் ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:28:06 AM (IST)

தேர்தலில் பிரச்சாரம் செய்வீர்களா? நோ கமெண்ட்ஸ் எனக் கூறிப் புறப்பட்ட நடிகர் ரஜினிகாந்த்!
சனி 4, ஏப்ரல் 2026 9:39:21 PM (IST)

