» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டங்களை நடத்த வேண்டும்: கமல்ஹாசன் வலியுறுத்தல்
திங்கள் 2, ஆகஸ்ட் 2021 12:36:07 PM (IST)
வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி, சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரனிடம் இன்று (ஆக. 02) காலை மனு ஒன்றை அளித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் கமல் கூறும்போது, "கிராம சபைக் கூட்டங்களை நடத்தக் கோரி மனு அளித்துள்ளோம். கடந்த 2020 ஜனவரிக்குப் பின்பு கிராம சபைக் கூட்டம் நடக்கவே இல்லை என்பதுதான் எங்கள் குறை. அதை மாவட்ட ஆட்சியரிடம் மனு மூலம் தெரிவித்துள்ளோம்.
வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி, சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கின்றோம். தமிழக நிதிநிலை அறிக்கையில் கிராம சபைகளுக்கு எனத் தனி நிதி ஒதுக்கீடு குறித்து அறிவிக்க வேண்டும்" என்றார். அப்போது, கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசியதாக சீமான் மீது வழக்குப்பதிவு
ஞாயிறு 19, அக்டோபர் 2025 1:14:38 PM (IST)

தூத்துக்குடியில் தீபாவளி பாதுகாப்பு தீவிரம்: ட்ரோன் கேமரா மூலம் நகர் பகுதிகள் கண்காணிப்பு!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 11:00:17 AM (IST)

பங்குசந்தையில் முதலீட்டில் நஷ்டம் : 2 மகன்களை கொன்றுவிட்டு இன்ஜினியர் தற்கொலை!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:17:00 AM (IST)

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் கனமழை: தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 9:56:47 AM (IST)

தூத்துக்குடியில் சீனாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.12 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல்!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 9:04:24 AM (IST)

கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 20 லட்சம் வழங்கிய விஜய்!
சனி 18, அக்டோபர் 2025 5:29:00 PM (IST)
