» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பேய் விரட்டுவதாக கூறி 7 வயது சிறுவன் அடித்து கொலை? தாய் உள்பட 3 பெண்கள் கைது

திங்கள் 21, ஜூன் 2021 11:59:17 AM (IST)

ஆரணி அருகே, பேய் விரட்டுவதாக கூறி 7 வயது சிறுவன் அடித்து கொலை செய்ததாக தாய் உள்பட 3 பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பெற்றோருடன் வசித்து வந்த 7 வயது சிறுவனுக்கு சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து சிறுவனுக்கு பேய் பிடித்ததாக கருதி, அவரது உறவினர்கள் சிறுவனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த சிறுவன் கதறி அழுத போதும் தொடர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். 

இது தொடர்பாக புகாரின் பேரில் சிறுவனின் தாய் உள்பட 3 பெண்களை கண்ணமங்கலம் போலீசார் கைது செய்தனர். மேலும் உயிரிழந்த சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவனுக்கு மருத்துவ முறையில் உடல்நிலை சரி இல்லாததை பேய் பிடித்ததாக கூறி இரவு முழுவதும் அடித்தே கொலை செய்தாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, வலிப்பு வந்து சிறுவன் இறந்துவிட்டதாக கைதான மூன்று பெண்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory