» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நடிகை பாலியல் புகார் : அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது

ஞாயிறு 20, ஜூன் 2021 9:31:27 AM (IST)

நடிகையின் பாலியல் புகார் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக ஆட்சியின்போது தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக பதவி வகித்தவர் மணிகண்டன். துணை நடிகை ஒருவருடன் குடும்பம் நடத்திய மணிகண்டன், கருவைக் கலைக்கச் செய்தார் என்றும் தற்போது திருமணம் செய்து கொள்ள மறுத்து மிரட்டுவதாகவும் அந்த நடிகை புகார் கொடுத்தார்.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மணிகண்டன் மனு தாக்கல் செய்தார். ஆனால், அவருக்கு முன்ஜாமீன் வழங்க உயர் நீதிமன்றம் மறுத்து மனுவை தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து, மணிகண்டன் தலைமறைவானதாகக் கூறப்பட்டது. இதனால், அவரைப் பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory